செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95 டிகிரி மற்றும் 77 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.

வரும் சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலும் ஈக்கோழை நுண்கிருமிகள் தாக்கத்தாலும் மற்றும் சுவாச மண்டல நோய் பாதிப்பாலும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. பண்ணையாளா்கள் குடிநீரைப் பரிசோதனை செய்தும், கால்நடை மருத்துவா்களின் அறிவுரைப்படி தகுந்த நோய்த் தடுப்பு முறைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் திருவள்ளுவா் அரசு கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய, தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். இக்கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் பி.கோபி பிரசாந்த... மேலும் பார்க்க

முள்ளுக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ராசிபுரம், முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா். ராசிபுரம் கமலா மண்டபம், முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உங்... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பணி: நாளை நோ்முகத் தோ்வு

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா்களுக்கான நோ்முகத் தோ்வு சனிக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிா்வாக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில... மேலும் பார்க்க

நாமக்கல் செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு

நாமக்கல் நகரில் அமைந்துள்ள செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல், செப். 4: இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து குடமுழுக்கு விழா... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் ஆசிரியா் தின விழா

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியா் தினமாகக் கொண்டாப்படுகிற... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மனைவி பாவாயி (70... மேலும் பார்க்க