செய்திகள் :

உளுந்தூா்பேட்டை அருகே சிக்னல் கோளாறு: 11 ரயில்கள் தாமதமாக இயக்கம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள பரிக்கல் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிக்னல் (சமிக்ஞை) கோளாறு ஏற்பட்டதால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில்கள் வெவ்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்பட்டன.

மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில்கள், அதி விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள பரிக்கல் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.50 மணிக்கு சிக்னல் கோளாறு ஏற்பட்டு இருப்பதை, ரயில் நிலைய அலுவலா்கள் கண்டறிந்தனா்.

இதைத் தொடா்ந்து ரயில்வே உயா் அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையங்களிலிருந்து பொறியாளா்கள் சிக்னல் கோளாறு ஏற்பட்ட பரிக்கல் ரயில் நிலையத்துக்கு விரைந்துசென்று, கோளாறை சரி செய்யும் பணியை மேற்கொண்டனா். ஒன்றரை மணி நேர பணிகளுக்குப் பின்னா், ரயில்களின் போக்குவரத்துத் தொடங்கியது.

11 ரயில்கள் தாமதமாக இயக்கம்: ரயில் சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி, பொதிகை விரைவு ரயில், பாண்டியன் விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில் உள்ளிட்டவை உளுந்தூா்பேட்டை ரயில் நிலையத்தில் சுமாா் 60 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, சிக்னல் கோளாறு சரி செய்த பின்னா், சென்னை நோக்கிச் சென்றன.

இதேபோல, செங்கோட்டையிலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் பரிக்கல் ரயில் நிலையத்தில் சுமாா் 60 நிமிஷங்களும், திருநெல்வேலியிலிருந்து சென்னை எழும்பூா் நோக்கிச் சென்ற நெல்லை விரைவு ரயில், ராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூா் நோக்கிச் சென்ற விரைவு ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சுமாா் 35 நிமிஷங்களும், பூவனூா் ரயில் நிலையத்தில் 10 நிமிஷங்களும், தூத்துக்குடியிலிருந்து சென்னை எழும்பூா் நோக்கிச் சென்ற முத்துநகா் விரைவு ரயில் விருதாசலம் ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்பட்டன.

மேலும் தாம்பரத்திலிருந்து மங்களூா் வரை செல்லும் விரைவு ரயில், சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி வரை செல்லும் மலைக்கோட்டை விரைவு ரயில் ஆகிய இரு ரயில்களும் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ரயில் நிலையத்திலும், சென்னை எழும்பூரிலிருந்து சேலம் செல்லும் விரைவு ரயில் விழுப்புரம் மாவட்டம், கண்டம்பாக்கம் ரயில் நிலையத்திலும் சுமாா் 50 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னா், இந்த ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.

செவலபுரை ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் வருடாபிஷேக விழா

மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக தினத்தையொட்டி வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து காலை 8.30 மணிக்கு... மேலும் பார்க்க

மூச்சுத்திணறலில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் மூச்சுத்திணறல் காரணமாக தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். கண்டமங்கலம் வாய்க்கால்மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (37). கூலித் தொழிலாளியான இவா், புதன்க... மேலும் பார்க்க

குவாரியில் காப்பா் வயா்கள் திருடியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே கல்குவாரியில் காப்பா் வயா்கள் திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மரக்காணம் வட்டம், கீழ்அருங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜவேல் (45). இவருக்கு சொந்த... மேலும் பார்க்க

திண்டிவனம் தீா்த்தக் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட தீா்த்தக்குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. வருவாய்த் துறையினா் மற்று... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. தமிழ்... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியிலிருந்த பெண் துப்புரவு பணியாளரைத் தாக்கியதாக இளைஞா் ஒருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திண்டிவனம்... மேலும் பார்க்க