செய்திகள் :

இத்தாலி: மனைவிகளின் நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்த ஆண்கள் குழு; சிக்கியது எப்படி?

post image

ஒரு ரகசிய பேஸ்புக் குழுவை அமைத்து அதில் பெண்களின் ஆபாசப் படங்களை அந்தக் குழுவில் உறுப்பினராக இருப்பவர்கள் பகிர்ந்து வந்துள்ளனர்.

2019 முதல் செயல்பட்டு வரும் இந்தக் குழு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதில் இருக்கும் பயனர்கள் தங்களின் துணையர்கள், தோழிகள், அந்நியர்கள் எனப் பெண்களின் நிர்வாண புகைப்படங்கள், தனிப்பட்ட புகைப்படங்களை அந்தக் குழுவில் பகிர்ந்துள்ளனர்..

பெண்கள் ஆடைகள் மாற்றுவது, சன் பாத் எடுப்பது, பாலியல் செயல்களில் ஈடுபடுவது போன்ற ஆபாசப் புகைப்படங்களை அதில் பகிர்ந்து வந்துள்ளனர்.

Representational Image

பல புகைப்படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் துணைவர்களே அதனைப் பதிவேற்றி இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு புகைப்படங்களைப் பகிர்ந்து ஆபாச கருத்துக்களை அதில் பேசியிருக்கின்றன.

மெட்டா மற்றும் இத்தாலியக் காவல்துறையினருக்கு இந்தக் குழுவை மூடக்கோரி பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து காவல்துறையினர் குற்றவியல் விசாரணை தொடங்கிக் கடந்த மாதம் இந்தக் குழுவைத் துண்டித்து இருக்கின்றன.

இத்தாலியில் 2019 முதல் இந்த வகையான குற்றங்களுக்கு எதிரான சட்டமும் உள்ளது. இதன்படி அனுமதியின்றி வெளிப்படையாக பாலியல் தொடர்பான படங்களைப் பதிவேற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

”மனைவியின் பேச்சைக் கேட்டும் ஆண்களே வெற்றிபெறுகிறார்கள்” - ஆய்வு கூறும் தகவல்கள் என்ன?

மனைவிகளின் பேச்சைக் கேட்கும் கணவர்கள் அந்தத் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், தங்களின் துறைகளிலும் வெற்றிகரமான நபராக மாறுவதாகவும் சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.திருமணம் என்றால் ... மேலும் பார்க்க

1,100 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது நேருவின் பங்களா - பின்னணி என்ன?

டெல்லியில் இருக்கும் நேருவின் லுட்யன்ஸ் பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. 3.7 ஏக்கர் பரப்பளவில், 24,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ... மேலும் பார்க்க

மும்பை: வாட்ஸ்அப் மிரட்டல்; கணபதி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்? - உஷார் நிலையில் போலீஸ்!

மும்பையில் நாளை விநாயகர் சதுர்த்தியின் இறுதிநாளாகும். ஆனந்த சதுர்த்தியான நாளை ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே 7வது நாளில் ஆயிரக்கணக... மேலும் பார்க்க

'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்!

ஆக்ஸ்போர்டு டிக்ஷனரில கூட வருஷத்துக்கு நாலு முறை தான் வேர்ட்ஸ் சேக்குறாங்க... ஆனா நம்ம ஜென்சி கிட்ஸ் ஒவ்வொரு நாளும் தினுசு தினுசா வார்த்தைகளைக் கண்டுபிடிக்கிறாங்க.. இன்ஸ்டா, ஃபேஸ்புக், செலிபிரிட்டி இன... மேலும் பார்க்க

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையான மும்பை தாதா அருண்காவ்லி.

மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தவர் அருண் காவ்லி. மும்பையில் தற்போது மாபியா கும்பல்கள் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அருண் காவ்லி உட்பட ஒரு சில கிரிமி... மேலும் பார்க்க