செய்திகள் :

பௌர்ணமியில் வரும் சந்திர கிரகணம்... கிரிவலம் செய்யலாமா? சாஸ்திரம் சொல்வது என்ன?

post image

திருவண்ணாமலை முதலான மலைத்தலங்களில் பௌர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் ஒருமுறை கிரிவலம் வந்தால் கர்ம வினைகள் தீரும் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலையில் சிவனே மலையாக அருள்வதால் ஒருமுறை பிரதட்சிணம் செய்துவழிபட்டால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பார்கள். கிரிவலத்தில் ஒவ்வோர் அடி எடுத்து வைப்பதற்கும் ஒரு பலன் உண்டு. வறுமை விலகும். காரியத் தடைகள் நீங்கும். கர்ம வினைகள் கழிவதால் வாழ்வில் நன்மைகள் பெருகும்.

எனவேதான் நாள்தோறும் அங்கே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக பௌர்ணமி திதியில் வலம் வருவது மிகவும் விசேஷம். அப்படிப்பட்ட பௌர்ணமி திதி இந்த மாதம் நாளை (7.9.25) அன்று வருகிறது. இந்த நாளில் அதிகாலை 1.48 முதல் மறுநாள் (8.9.25) அன்று அதிகாலை 12.32 வரை பௌர்ணமி திதி உள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

இந்த வேளையில்தான் கிரகணமும் தோன்றுகிறது. நாளை இரவு 9:51 மணிக்குத் தொடங்கி, பின்னிரவு 2:25 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. இந்தக் காலத்தில் ஜபங்கள் செய்வது, பித்ருக்களுக்கு உரிய தர்ப்பணங்கள் செய்வது ஆகியன விசேஷம். கிரகண வேளையில் கிரிவலம் செல்லலாமா என்று பலரும் கேட்கிறார்கள். இது குறித்து சாஸ்திரம் சொல்வது என்ன என்பது குறித்துக் கேட்டோம்.

"கிரகண வேளையில் இறைவழிபாட்டில் நிலைத்திருக்க வேண்டும். இறைவனைத் தியானம் செய்ய வேண்டும். அவனது நாமங்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். கிரகண காலத்தில் ஒருமுறை சொல்லும் நாம ஜபம் பன்மடங்கு செய்த பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம்.

அந்த வகையில் கிரிவலம் என்பதும் இறைவழிபாட்டில் ஒரு அங்கம் தான். பொதுவாக கிரிவலம் செய்யும்போது அமைதியாக ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி மெதுவாக நடக்க வேண்டும். வேகவேகமாக நடைப்பயிற்சி போன்று செல்லக்கூடாது. மேலும் நடக்கும்போது ஏதேனும் சாப்பிட்டுக்கொண்டு செல்லக் கூடாது. அப்படிச் செல்வது எப்போதுமே தவறு.

கிரகண வேளையில் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. எனவே அது கிரகண காலத்தில் செய்யும் கிரிவலத்தின் போதும் பொருந்தும். அதேவேளையில் தொடர்ந்து நான்கு, ஐந்து மணி நேரங்கள் நடக்கும்போது உடல் சோர்வடையும். தண்ணீரேனும் பருக வேண்டும் என்கிற அவசியம் ஏற்படும். அதனால்தான் கிரகண காலத்தில் கிரிவலம் வேண்டாம் என்று சிலர் சொல்கிறார்கள்.

உங்களால் தண்ணீர் பருகாமலும் உணவு ஏதும் உட்கொள்ளாமலும் ஆரோக்கியமாக கிரிவலம் செய்ய முடிந்தால் தாராளமாகச் செய்யலாம். சந்தேகம் இருப்பவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து கிரகண வேளையில் ஜபம் செய்து கிரகணம் முடிந்ததும் நீராடிப் பின் கிரிவலம் வரலாம். தவறில்லை. ஈசனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்" என்கின்றனர் பெரியோர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மதுரை: வாழ்வை மாற்றும் அனுஷ வழிபாடு... மகாபெரியவரின் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சி மடத்தின் ஆசார்யர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். இந்தப் பூவுலகில் தர்மம் தளைக்கப்பாடுபட்ட அந்த மகானை பக்தர்கள், 'மகாபெரியவர்' என்று அன்புடன் அழைத்தனர். வாழும்... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி... பூஜை செய்ய நல்ல நேரம் முதல் பூஜை முறைகள் வரை!

விநாயகர் சதுர்த்தி அனைவரும் கொண்டாட வேண்டிய பண்டிகை. விநாயகர் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். காரணம் அவரது தோற்றம். மற்றும் அவரது எளிமை. கோயில் வேண்டும் என்று இல்லை. அரச மரத்தடியிலும் ஆலமரத்தடியிலும்... மேலும் பார்க்க

Vinayagar Chaturthi | சொர்ண, அமிர்தகலச, ஹேரம்ப கணபதி... எந்த விநாயகர்-என்ன பலன்? விநாயகர் சதுர்த்தி

தமிழ் மாதமான ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளை நாம் விநாயகர் சதுர்த்தி என்று சிறப்பாகக் கொண்டாடுகிறோம். புராணங்களின்படி, அன்றைய தினமே விநாயகப் பெருமான் அவதாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அனைவராலும் நேசி... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி: ஸ்ரீ கோகுல கிருஷ்ணர் கோயிலில் ஆனந்தமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணை அருகில் குரும்பப்பட்டி என்னும் குக்கிராமத்தில் ஸ்ரீ கோகுலகிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணரைக் கொண்டாடும் விதமாக ஹ... மேலும் பார்க்க

18-ம் படி கருப்பணசாமி: `பணத்தை தர்றியா கருப்புகிட்ட வர்றியா?' - கதவு திறக்கும் வைபவம்

"உங்கிட்ட நான் கை நீட்டிக் காசு வாங்கல. வாங்கினேன்னு நீ சொன்னா அதுக்கு சாட்சி இருந்தாக் கூட்டிக்கிட்டு வா... எங்க வேண்ணா போ... எந்தக் கோர்ட்ல வேணும்னாலும் கேஸ் போடு. உன்னால ஆனதப் பாரு. என்னால் ஆனத நான... மேலும் பார்க்க