செய்திகள் :

ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறாரா விஜய்?

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை வருகிற செப். 13 ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை வருகிற செப். 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சியில் 2 இடங்களில் விஜய் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் அதில் ஒரு இடம் ஸ்ரீரங்கம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் ஸ்ரீரங்கம் கோயில் முன்பிருந்தே விஜய் தனது பிரசாரத்தைத் தொடங்கவிருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாகவும் காவல்துறை அனுமதி பெற தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இன்று திருச்சி வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று மாலை அல்லது நாளை விஜய்யின் பிரசாரம் குறித்த முழுமையான தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

TVK leader Vijay is set to begin his election tour in Srirangam on September 13, according to reports.

இதையும் படிக்க | ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!

தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, செப். ... மேலும் பார்க்க

அதிமுக பொறுப்புப் பறிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை: செங்கோட்டையன்

அதிமுகவின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டது வேதனையளிக்கவில்லை. மகிழ்ச்சியே என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்திலேயே கருத்து கூறினேன். ... மேலும் பார்க்க

நான் பிரதீப் ஜான் கிடையாது; செங்கோட்டையன் கெடு குறித்து டிடிவி தினகரன் பதில்

நான் பிரதீப் ஜான் கிடையாது, செங்கோட்டையன் முயற்சி வெற்றிபெறுமா எனறு கணித்துச் சொல்வதற்கு என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறுவதாக டிடி... மேலும் பார்க்க

பணமதிப்பிழப்பு நோட்டுகள் மூலம் ரூ. 450 கோடி சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா! சிபிஐ வழக்கு!

பணமதிப்பிழப்பு சமயத்தில் ரூ. 450 கோடி நோட்டுகள் மூலம் அதிமுக முன்னாள் பொதுச் செயலர் சசிகலா சர்க்கரை ஆலை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த சர்க்கரை ஆலையின் நிர்வாகிகள் மீது மத்திய குற்றப்புலனாய்வ... மேலும் பார்க்க

அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

சென்னை சென்டிரல் - ஆவடி இடையே ரயில் சேவை பாதிப்பு!

சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து, ஆவடி ரயில் நிலையம் வரை பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள்... மேலும் பார்க்க