செய்திகள் :

தொடர் மழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஹிமாசல்: 360 பேர் பலி, 1001 சாலைகள் மூடல்!

post image

ஹிமாசலப் பிரதேசம் தொடர்ந்து கடுமையான பருவமழையின் தாக்கத்தால் தத்தளித்து வருகிறது. இந்த பருவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது.

பருவமழை தொடங்கியதில் இருந்து ஹிமாச்சலில் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றது. தொடர் மழை வெள்ளம் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை மழை தொடர்பான சம்பவங்களில் 197 பேரும், சாலை விபத்துகளில் 163 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி வெளியிட்ட அறிக்கையில், மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் (NH-03, NH-305, NH-505) உள்பட 1,001 சாலைகளில் நிலச்சரிவு, மண்சரிவு, திடீர் வெள்ளம் காரணமாக தடைபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1,992 மின் விநியோக மின்மாற்றிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, அதே நேரத்தில் 472 நீர் வழங்கல் திட்டங்கள் செயல்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் பல மாவட்டங்களில் சாலைகள் தடைச் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்படக்கூடிய மண்டலங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், ஆலோசனைகளுக்கு இணங்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுப்பணித் துறை, ஹிமாச்சலப் பிரதேச மாநில மின்சார வாரியம் மற்றும் நீர் வழங்கல் வாரியம் போன்ற துறையை மறுசீரமைப்பு செய்யவும் 24 மணி நேரமும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், தொடர் மழை மற்றும் நிலச்சரிவுகளால் தாமதங்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-இல் இருந்து இதுவரை 45 மேகவெடிப்புகள், 95 பெருவெள்ளங்கள், 132 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு, ரூ.3,780 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான சேதங்களை விளைவித்துள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் சுக்விந்தா் சிங் சுக்கு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Himachal Pradesh continues to reel under the impact of an intense monsoon, with the death toll this season touching 360, including 197 in rain-related incidents and 163 in road accidents, according to the State Disaster Management Authority (SDMA).

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பொறியாளர் ரஷீத் வாக்களிக்க அனுமதி!

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவைச் சேர்ந்த மக்களவை எம்.பி. பொறியாளர் ரஷீத் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் குடியரசுத் துணைத் தல்வர் தேர்தலில் வாக்களிக்க தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் -நிர்மலா சீதாராமன்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தைத் தொடர்ந்து, மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தற்போதுள்ள 5%, 12%, 18%... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு குறையும்?

ஜிஎஸ்டி வரி குறைப்பினால் வாகனங்களின் விலை குறிப்பாக கார்களின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த செப். 3 ஆம் தேதி தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமை... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் ஒருவர் பலி!

கேரளத்தில் மூளையைத் தின்னும் ஆமிபா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) எனும் அமீபிக் மூளைக்காய்ச்சல்(primary amoebic meningoencephalitis) என்... மேலும் பார்க்க

பஞ்சாப் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார் மணீஷ் சிசோடியா!

ஆத் ஆம் கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். முதல்வர் பகவந்த் மான்(51) சோர்வு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக வெள்ளிக்க... மேலும் பார்க்க

தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!

நாட்டையே உலுக்கிய மேகாலயா தேனிலவுக் கொலை வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவினர், விசாரணையை முடித்து, 790 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், அவரது மனைவி... மேலும் பார்க்க