செய்திகள் :

'ட்ரம்ப் கருத்தைப் பாராட்டுகிறேன், உடன்படுகிறேன்' - மோடி பதிவு; இந்தியா-அமெரிக்கா மீண்டும் நட்பா?

post image

இந்தியா - ரஷ்யா வணிகத்தால், இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இருந்த கோபமும், அதிருப்தியும் தணிந்து வருகிறது போலும்.

நேற்று...

ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'சீனாவிடம் இந்தியாவையும், ரஷ்யாவையும் தொலைத்துவிட்டது போல இருக்கிறது' என்று பதிவிட்டிருந்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

செய்தியாளர்கள் சந்திப்பில், ட்ரம்ப், "நான் எப்போதும் பிரதமர் மோடி உடன் நட்பாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர்.

நான் எப்போதுமே அவருக்கு நண்பர் தான். ஆனால், இப்போது என்ன நடக்கிறதோ, அது தான் எனக்கு பிடிக்கவில்லை.

எப்போதுமே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மிக சிறப்பான உறவு இருக்கும். அது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவ்வப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும். அவ்வளவு தான்" என்று கூறியிருந்தார்.

மோடி பதிவு

அவருக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் ட்ரம்பின் கருத்துக்களையும், பாசிட்டிவான மதிப்பீட்டையும் நான் ஆழமாக பாராட்டுகிறேன் மற்றும் முழுமையாக உடன்படுகிறேன்.

இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் பாசிட்டிவான மற்றும் முன்னோக்குச் சிந்தனையுடன் கூடிய ஒரு விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

ஆக, இந்தியா - அமெரிக்கா உறவு மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளது என்பதை நம்புவோம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது'- டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். “ஓ.பன்னீர்செல... மேலும் பார்க்க

`சமூக நீதி டு கல்வித்துறை பங்களிப்பு'- இங்கிலாந்தின் புதிய துணை பிரதமரானார் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் பிரதமராக கடந்த ஆண்டு ஜுலை 5-ம் தேதி பதவியேற்றார் கியர் ஸ்டார்மர். அவரைத் தொடர்ந்து துணை பிரதமராக ஆஞ்சலா ரெய்னர் பதவியேற்றார். ஆட்சி அமைத்து ஒர் ஆண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில், துணை ப... மேலும் பார்க்க

புதுச்சேரி: சுற்றுலா பெயரில் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு மோசடி! - அதிரடியாக அகற்றிய நகராட்சி

புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான இடங்களை, அரசியல் செல்வாக்குடன் தனி நபர்கள் ஆக்கிரமிக்கும் செயல், நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக கூடாரத்தைப் போடும் அவர்கள், நாளடைவில் அங்கு கான்கிரீட் கட்... மேலும் பார்க்க

ADMK: ``கட்சிக்கு என்ன பாதிப்பு என்பது போகப் போகத் தெரியும்" - அழுத்தமாகப் பேசும் செங்கோட்டையன்

அ.தி.மு.க மூத்த தலைவரான செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, "கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க வெற்றி பெற முடிய... மேலும் பார்க்க

அதிமுக: "தேவைப்பட்டால் செங்கோட்டையனுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" - டிடிவி தினகரன்

"அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்... மேலும் பார்க்க

அமமுக: "அண்ணாமலை இருந்தவரை கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை"- TTV தினகரன் சொல்வது என்ன?

கடந்த மாதம் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சில தினங்களுக்கு முன்பாக என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தா... மேலும் பார்க்க