செய்திகள் :

ADMK: ``கட்சிக்கு என்ன பாதிப்பு என்பது போகப் போகத் தெரியும்" - அழுத்தமாகப் பேசும் செங்கோட்டையன்

post image

அ.தி.மு.க மூத்த தலைவரான செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க வெற்றி பெற முடியும். 'மறப்போம் மன்னிப்போம்' என்ற அடிப்படையில் கட்சியைவிட்டு வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும்.

10 நாள்களில் பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்து அ.தி.மு.க-வை ஒன்றிணைக்க வேண்டும். இது நடந்தால்தான் சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்" எனத் தெரிவித்திருந்தார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

இதைத் தொடர்ந்து, இன்று செங்கோட்டையன் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும், அத்துடன் அவரது ஆதரவாளர்களான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளையும் நீக்குவதாகவும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பைத் தொடர்ந்து, செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``அ.தி.மு.க மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, தொண்டர்களுடைய உணர்வுகள், மக்களுடைய எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கின்ற வகையில், நேற்றைய தினம் அந்த விளக்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தேன்.

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களும், 'காலில் வேண்டுமானாலும் விழுகிறோம். இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்' எனப் பேசியிருக்கிறார்கள். இதற்கு மேலும் அவர்கள் கேட்க என்ன இருக்கிறது?

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

ஆனால் கட்சி தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை என்கிற பொழுது, இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்துவது இந்த இயக்கத்திற்கு நல்லது. அந்த முறையில்தான், என் கருத்தைத் தெரிவித்தேன்.

அதற்கு இன்று கழகத்திலிருந்து கட்சிப் பொறுப்புகளைப் பறித்து விடுவிக்கப்பட்டிருக்கிறேன். ஜனநாயகத்துடன், சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்குத் தடை இல்லை என்று பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள்.

இந்த நடவடிக்கைக்கு முன்பு என்னிடம் கட்சி சார்பில் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இதனால் கட்சிக்கு என்ன பாதிப்பு என்பது போகப் போகத் தெரியும்.

இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை இப்போது சொல்வதற்கு இல்லை. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். நான் நேற்று என்ன கூறினேனோ அதை நோக்கியே என் பணி தொடரும்.

நான் நேற்று பேட்டியளித்தற்குப் பிறகு சிலர் என் கருத்துக்கு ஆதரவாக என்னிடம் பேசினார்கள். என் மீதான நடவடிக்கையால் கட்சிக்கு என்ன பாதிப்பு என்பதையும் போகப் போக காலம் சொல்லும். என் கருத்து சரியானது என டிடிவி தினகரன், சசிகலா மட்டுமல்ல நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, பிரேமலதா கூட ஆமோதித்திருக்கிறார்கள்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது'- டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். “ஓ.பன்னீர்செல... மேலும் பார்க்க

`சமூக நீதி டு கல்வித்துறை பங்களிப்பு'- இங்கிலாந்தின் புதிய துணை பிரதமரானார் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் பிரதமராக கடந்த ஆண்டு ஜுலை 5-ம் தேதி பதவியேற்றார் கியர் ஸ்டார்மர். அவரைத் தொடர்ந்து துணை பிரதமராக ஆஞ்சலா ரெய்னர் பதவியேற்றார். ஆட்சி அமைத்து ஒர் ஆண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில், துணை ப... மேலும் பார்க்க

'ட்ரம்ப் கருத்தைப் பாராட்டுகிறேன், உடன்படுகிறேன்' - மோடி பதிவு; இந்தியா-அமெரிக்கா மீண்டும் நட்பா?

இந்தியா - ரஷ்யா வணிகத்தால், இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இருந்த கோபமும், அதிருப்தியும் தணிந்து வருகிறது போலும்.நேற்று... ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'சீனாவிடம் இந்தியாவையும், ரஷ்... மேலும் பார்க்க

புதுச்சேரி: சுற்றுலா பெயரில் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு மோசடி! - அதிரடியாக அகற்றிய நகராட்சி

புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான இடங்களை, அரசியல் செல்வாக்குடன் தனி நபர்கள் ஆக்கிரமிக்கும் செயல், நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக கூடாரத்தைப் போடும் அவர்கள், நாளடைவில் அங்கு கான்கிரீட் கட்... மேலும் பார்க்க

அதிமுக: "தேவைப்பட்டால் செங்கோட்டையனுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" - டிடிவி தினகரன்

"அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்... மேலும் பார்க்க

அமமுக: "அண்ணாமலை இருந்தவரை கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை"- TTV தினகரன் சொல்வது என்ன?

கடந்த மாதம் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சில தினங்களுக்கு முன்பாக என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தா... மேலும் பார்க்க