செய்திகள் :

டெல்லி செங்கோட்டை ஆன்மிக நிகழ்ச்சியில் ரூ.1.5 கோடி தங்க கலசங்கள் திருட்டு; மதகுருவாக வந்தவர் கைவரிசை

post image

டெல்லி செங்கோட்டையில் ஒவ்வோர் ஆண்டும் ஜெயின் மத நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் செங்கோட்டை வளாகத்தில் தஸ்லக்ஷன் மஹாபர்வ் என்ற ஜெயின் ஆன்மிக நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி வரும் 9ம் தேதி வரை நடைபெறும். இவ்விழாவிற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைக்கப்பட்டு இருந்தார். இவ்விழாவிற்கு தொழிலதிபர் சுதிர் ஜெயின் என்பவர் தனது வீட்டில் இருந்த தங்க கலசங்களை எடுத்து வந்திருந்தார். அவற்றை பூஜை நடைபெறும் இடத்தில் வைத்திருந்தார். இரண்டு தங்க கலசங்களின் மதிப்பு ரூ.1.5 கோடியாகும். அந்த தங்க கலசத்தின் மீது வைரம் மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டு இருந்தது.

விழாவிற்கு முக்கிய விருந்தினர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வரவேற்றுக்கொண்டிருந்தனர்.

அனைவரும் வந்த பிறகு ஆன்மிக நிகழ்ச்சியை தொடங்கியபோது தங்க கலசங்களை தேடினர். ஆனால் பூஜை நடக்கும் இடத்தில் இருந்து அது காணாமல் போய் இருந்தது. இதனால் அங்கு அனைத்து இடத்திலும் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஆன்மிக மதகுரு வேடத்தில் வந்த ஒருவர், அந்த தங்க கலசங்களை ஒரு பையில் எடுத்து தோளில் போட்டுக்கொண்டு சர்வசாதாரணமாக நடந்து செல்வது பதிவாகி இருந்தது.

இது குறித்து சுதிர் ஜெயின் கூறுகையில், ''கூட்டத்தை சாதகமாக்கிக் கொண்டு திருடி சென்று இருக்கிறான். கலசத்தில் இருந்த ரத்தினங்கள் அழகிற்காக மட்டுமே இருந்தது. ஆனால் கலசம் எனது மத உணர்வுகளோடு தொடர்புடையது. அதனை மதிப்பிட முடியாது" என்று கூறினார். குற்றவாளி குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைவில் திருடன் பிடிபடுவான் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்தனர். தங்க கலசத்தை திருடிய நபர் இதற்கு முன்பு மூன்று கோயில்களில் திருட முயற்சி செய்ததாக சுதிர் ஜெயின் உறவினர் புனீத் ஜெயின் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வந்து சென்ற பிறகு இத்திருட்டு நடந்துள்ளது.

பாமக: நூலிழையில் உயிர் தப்பிய ம.க.ஸ்டாலின்; காரில் தப்பிய 8 பேர்; 5 முறை போனில் பேசிய ராமதாஸ்

கும்பகோணம், ஆடுதுறை அருகே உள்ள மேலமருத்துவக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். ஆடுதுறை பேரூராட்சி தலைவராக இருக்கும் இவர், பா.ம.க-வில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பத... மேலும் பார்க்க

மதுரை: `காவல் நிலையம் கட்டப்பஞ்சாயத்து செய்யுமிடமாக செயல்பட்டுள்ளது' - நீதிபதி காட்டம்!

"காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எப்படி கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு இந்த காவல் நிலையம் ஒரு உதாரணம்" என்று மதுரையிலுள்ள திலகர் திடல் காவல் நிலையத்தை குற்றம்சாட்டி உய... மேலும் பார்க்க

இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்ட விவகாரம்: நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை; சிபிஐ விசாரணை கோரி மனு

தன்னிடம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரத்துடன் புகார் அளித்தும், கண்டுகொள்ளாத லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை கேட்டுப் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச்சு, கடும் தாக்குதல்; பாமக மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயற்சியா?

பா.ம.க-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளவர் ம.க. ஸ்டாலின். இவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவியில் உள்ளார். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியு... மேலும் பார்க்க

'கருவின் பாலினத்தைக் கண்டறிய ரூ.25,000' - புரோக்கரை மடக்கிப் பிடித்து சுகாதாரத்துறை; என்ன நடந்தது?

சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கடலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு சட்டவிரோதமாக பாலினத்தைக் கண்டறிய அனுப்ப... மேலும் பார்க்க

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராச... மேலும் பார்க்க