செய்திகள் :

காந்தி கண்ணாடி: "கஷ்டப்பட்டு உழைத்த பணத்துலத்தான் உதவி பண்றேன்" - விமர்சனங்களுக்கு KPY பாலா பதில்

post image

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.

தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக்-மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

Gandhi Kannadi - KPY Bala
Gandhi Kannadi - KPY Bala

இப்படம் நேற்று (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியானது. தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுப்பது, குழந்தைகளைப் படிக்க வைப்பது எனத் தொடர்ந்து சமூக சேவை செய்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 6) செய்தியாளர்களைச் சந்தித்த KPY பாலாவிடம், "நீங்கள் பணம் வாங்கி உதவுவதாக வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த பாலா, "இதுவரைக்கும் நான் யார்கிட்டேயும் ஒரு ரூபாய்கூட வாங்கி உதவி பண்ணல.

இரவு பகலா கஷ்டப்பட்டு உழைச்சு சொந்தக்காசுலதான் பண்றேன். இதற்கு மேலையும் யார்கிட்டையும் காசு வாங்கி உதவி பண்ணமாட்டேன்.

பாலா பிரேமாவுக்கு அளித்த இலவச வாகனம்
பாலா பிரேமாவுக்கு அளித்த இலவச வாகனம்

ஒரு சதவீத மக்களை என்னைய விமர்சித்தாலும் 99 சதவீத மக்கள் அதற்கான பதிலைச் சொல்லிறாங்க. அதனால நான் எதுவும் சொல்ல விரும்பல.

நான் இங்க நிக்குறதுக்கு ஒரே காரணம் தமிழ்நாட்டு மக்கள்தான். அவர்களுக்கு எப்போதுமே நன்றியுள்ளவனாகத்தான் இருப்பேன்" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"வைகோ சினிமாவில் இருந்திருந்தால் இன்றைக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்" - தம்பி ராமையா பேசியது என்ன?

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து நடிகர் தம்பி ராமையா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.வைகோ குறித்துப் பேசிய அவர், "வைகோ சினிமாவில் மட்டும் கால் பதித்திருந்தால் ... மேலும் பார்க்க

காயல்: "ஆண் வர்க்கமே மோசம் என்று இருப்பதை உடைக்க விரும்பினேன்" - இயக்குநராகும் தமயந்தி பேட்டி

எழுத்தாளர் தமயந்தி முதன் முதலாக இயக்கிய 'காயல்' திரைப்படம் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது. அதன் இறுதி கட்ட பரபரப்பில் இருக்கிறார் அவர்.தான் இயக்கும் 'காயல்' படத்தின் அம்சங்களை அது கொண்டு வரும் உணர்வ... மேலும் பார்க்க

காந்தி கண்ணாடி: "என் படத்துக்கு பேனர் வைக்க, போஸ்டர் ஒட்ட விடல; அதனால" - KPY பாலா என்ன சொல்கிறார்?

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹ... மேலும் பார்க்க

காந்தி கண்ணாடி: "பாலா சிரித்தால் மக்கள் சிரிக்கிறார்கள்; அழுதால் அழுகிறார்கள்" - நெகிழும் லாரன்ஸ்

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹ... மேலும் பார்க்க

கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு: "நாத்திகர்களும் விரும்பிக்கேட்ட நல்ல பாட்டு" - வைரமுத்து இரங்கல்

கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் வயது (90) மூப்பின் காரணமாக நேற்று (செப்டம்பர் 5) மாலை காலமானார்.1967 முதல் பாடல்கள் எழுதி வந்த இவர், பக்தி பாடல்கள், ஆயிரக்கணக்கான திரைப்படப் பா... மேலும் பார்க்க