செய்திகள் :

புதுச்சேரி: சுற்றுலா பெயரில் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு மோசடி! - அதிரடியாக அகற்றிய நகராட்சி

post image

புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான இடங்களை, அரசியல் செல்வாக்குடன் தனி நபர்கள் ஆக்கிரமிக்கும் செயல், நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக கூடாரத்தைப் போடும் அவர்கள், நாளடைவில் அங்கு கான்கிரீட் கட்டிடங்களை கட்டி ஆக்கிரமித்து விடுகிறார்கள்.

குறிப்பாக சாலையோரத்தில் செய்யப்படும் இப்படியான ஆக்கிரமிப்புகளால், சாலை குறுகி புதுச்சேரியில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நகரின் முக்கிய இடங்கள் மற்றும் சாலையோரங்களில் தள்ளு வண்டிக் கடைகளைப் போட்டு இடம் பிடிக்கும் ரௌடிகள், அதனை உள்வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகின்றனர்.

புதுச்சேரி நகராட்சி

இதனைக் கண்டுபிடித்த புதுச்சேரி நகராட்சி, சமீப காலமாக அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வருகிறது. கடற்கரை சாலையில் இருக்கும் தலைமைச் செயலகத்திற்கு அருகில் எந்தவித அனுமதியும் இன்றி ஆண்டுக்கணக்கில் செயல்பட்டு வந்த டீ கடையால், அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.

தலைமைச் செயலகத்திற்கு வரும் அதிகாரிகளின் வாகனங்களைக் கூட அங்கு திருப்ப முடியாது. நல்ல வருவாய் பார்த்துக் கொண்டிருந்த அந்த டீ கடையால், புதுச்சேரி நகராட்சிக்கு எந்தவித வருவாயும் இல்லை.

இந்த நிலையில் அந்தக் கடையை விரிவாக்கம் செய்ய நினைத்தபோது, புதுச்சேரி நகராட்சி அதை அதிரடியாக அகற்றியது.

இந்த நிலையில்தான் கடற்கரை சாலையில் புதுச்சேரி சுற்றுலாத் துறையின் `லே கஃபே’ உணவகத்துக்கு அருகில் இருக்கும் இடத்தில், `I Pondy - Pondicherry information Bureau’ என்ற பெயரில் கடந்த 8 ஆண்டுகளாக தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

சுற்றுலா தகவல் மையம் என்ற பெயரில், தனி நபர்களின், நிறுவனங்களின் விளம்பரமும் செய்யப்பட்டு வந்தன. ஆனால் அதற்காக அவர்கள் எந்த துறையிடமும், குறிப்பாக நகராட்சியிடமும் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பை அகற்றி வரும் நகராட்சி

இந்த நிலையில்தான் சிறிய அளவில் செயல்பட்டு வந்த அந்த மையத்தை, பெரிய கூடாரமிட்டு சமீபத்தில் விரிவாக்கம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அதைப் பார்த்த நகராட்சி ஊழியர்கள், இங்கு தகவல் மையம் அமைப்பதற்கு யாரிடம் அனுமதி பெற்றீர்கள் என்று கேட்டிருக்கின்றனர்.

அதற்கு அவர்கள் யாரிடமும் அனுமதி பெறவில்லை என்று கூறியதும், அங்கிருந்த கூடாரத்தை அதிரடியாக அகற்றி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது, ``புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை இருக்கும்போது, தனி நபர்கள் ஏன் அதை செய்ய வேண்டும் ?

அதிலும் மிக முக்கியமான கடற்கரை சாலையில், எந்தவித அனுமதியும் பெறாமல் இத்தனை ஆண்டுகள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்” என்றனர். புதுச்சேரி நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு,  பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

'அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது'- டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். “ஓ.பன்னீர்செல... மேலும் பார்க்க

`சமூக நீதி டு கல்வித்துறை பங்களிப்பு'- இங்கிலாந்தின் புதிய துணை பிரதமரானார் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் பிரதமராக கடந்த ஆண்டு ஜுலை 5-ம் தேதி பதவியேற்றார் கியர் ஸ்டார்மர். அவரைத் தொடர்ந்து துணை பிரதமராக ஆஞ்சலா ரெய்னர் பதவியேற்றார். ஆட்சி அமைத்து ஒர் ஆண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில், துணை ப... மேலும் பார்க்க

'ட்ரம்ப் கருத்தைப் பாராட்டுகிறேன், உடன்படுகிறேன்' - மோடி பதிவு; இந்தியா-அமெரிக்கா மீண்டும் நட்பா?

இந்தியா - ரஷ்யா வணிகத்தால், இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இருந்த கோபமும், அதிருப்தியும் தணிந்து வருகிறது போலும்.நேற்று... ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'சீனாவிடம் இந்தியாவையும், ரஷ்... மேலும் பார்க்க

ADMK: ``கட்சிக்கு என்ன பாதிப்பு என்பது போகப் போகத் தெரியும்" - அழுத்தமாகப் பேசும் செங்கோட்டையன்

அ.தி.மு.க மூத்த தலைவரான செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, "கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க வெற்றி பெற முடிய... மேலும் பார்க்க

அதிமுக: "தேவைப்பட்டால் செங்கோட்டையனுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" - டிடிவி தினகரன்

"அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்... மேலும் பார்க்க

அமமுக: "அண்ணாமலை இருந்தவரை கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை"- TTV தினகரன் சொல்வது என்ன?

கடந்த மாதம் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சில தினங்களுக்கு முன்பாக என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தா... மேலும் பார்க்க