செய்திகள் :

ஐ.நா. அமர்வை புறக்கணிக்கும் மோடி! ஜெய்சங்கர் பங்கேற்கிறார்!!

post image

புது தில்லி: செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் வருடாந்திர உயர்நிலைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கப்போவதில்லை என்றும், அவருக்கு பதிலாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்தான் பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பதில், மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்று இந்தியா சார்பில் உரையாற்றவிருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் தலைவர்களின் திருத்தப்பட்ட தற்காலிக பட்டியலில் பிரதமர் மோடி பெயர் இடம்பெறவில்லை.

ஐ.நா. பொது அவையின் 80வது அமர்வு செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும். உயர்நிலைக் கூட்டத்தில் பொது விவாதம் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும், இந்த அமர்வின் முதல் பேச்சாளராக பிரேசில் இருக்கும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் இடம்பெறும்.

ஆனால், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறி நீடிக்கும் நிலையில், பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதைத் தவிர்க்கும் வகையில் இந்த பயணத்தை ரத்து செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய ஏற்றுமதி பொருள்கள் மீதான 50 சதவிகித வரி விதிப்பால், இரு நாட்டு உறவில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 முறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும், பிரதமர் மோடி பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பயணத்தை ரத்து செய்த நிலையில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!

நாட்டையே உலுக்கிய மேகாலயா தேனிலவுக் கொலை வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவினர், விசாரணையை முடித்து, 790 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், அவரது மனைவி... மேலும் பார்க்க

டிரம்ப் கருத்துக்கு மோடி வரவேற்பு! வரியைக் குறைக்குமா அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்தை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பதிவிட்டுள்ளார்.சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் சீனா மற்றும் ரஷிய அதிபர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி ... மேலும் பார்க்க

மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்! நொய்டாவில் ஒருவர் கைது!

மும்பையில் குண்டிவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தப் போவதாக மிரட்டல் விடுத்தவரை நொய்டாவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மும்பையில் கடந்த ஆகஸ்ட் 27 -ஆம் தேதி தொடங்கிய விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்கள், ச... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பலன் நுகா்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடா்பாக தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் அரசு ம... மேலும் பார்க்க

நாட்டில் இதய நோய்களால் 31% போ் உயிரிழப்பு

இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் ‘மரணம் ஏற்படுவதற... மேலும் பார்க்க

கேரளத்தில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

கேரளத்தில் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்க... மேலும் பார்க்க