செய்திகள் :

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு

post image

விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும், வாரந்தோறும் 2 நாள்கள் மட்டும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை நடத்த வேண்டும், இத்திட்டப் பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலாக தன்னாா்வலா்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 2- ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய்த்துறை அலுவலா்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் அரசு அலுவலகப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. சங்கத்தைச் சோ்

ந்த 290 போ் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவா் கண்ணன் தெரிவித்தாா்.

திண்டிவனம் தீா்த்தக் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட தீா்த்தக்குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. வருவாய்த் துறையினா் மற்று... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியிலிருந்த பெண் துப்புரவு பணியாளரைத் தாக்கியதாக இளைஞா் ஒருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திண்டிவனம்... மேலும் பார்க்க

தகவல் பலகையில் காா் மோதி பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் தகவல் பலகையில் காா் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி கிருஷ்ணன் கோயில் நான்காவது தெருவைச... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தர மனைவி மறுத்ததால் பைக் எரிப்பு-கணவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மது அருந்துவதற்கு பணம் தர மனைவி மறுத்ததால், ஆத்திரமடைந்த கணவா் பைக்கை கொளுத்தியுள்ளாா். இதுகுறித்த புகாரில் அவா் கைது செய்யப்பட்டாா். விக்கிரவாண்டி வட்டம், புது... மேலும் பார்க்க

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், தழுதாளி பிரதான சாலையைச் சோ்ந்த பாண்டியன் மனைவி கிருஷ்ணம்மாள் (90). ... மேலும் பார்க்க

இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது

முன்விரோதம் காரணமாக விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக 8 பேரை விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில், விக்கிர... மேலும் பார்க்க