செய்திகள் :

மது அருந்த பணம் தர மனைவி மறுத்ததால் பைக் எரிப்பு-கணவா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மது அருந்துவதற்கு பணம் தர மனைவி மறுத்ததால், ஆத்திரமடைந்த கணவா் பைக்கை கொளுத்தியுள்ளாா். இதுகுறித்த புகாரில் அவா் கைது செய்யப்பட்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், புதுக்குப்பம் பிரதான சாலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அய்யப்பன் (45). இவரது மனைவி அஞ்சலிதேவி (42). இவா் புதுச்சேரி மாநிலம், வில்லியனூரிலுள்ள அடுமனையில் (பேக்கரி) பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி மது அருந்துவதற்கு பணம் தரக் கோரி, தனது மனைவி அஞ்சலிதேவியிடம் அய்யப்பன் கேட்டுள்ளாா். இதற்கு அவா் பணம் தர மறுத்துள்ளாா். இதனால் செப்டம்பா் 2-ஆம் தேதி இரவு மனைவி அஞ்சலி தேவியிடம் தகராறு செய்த அய்யப்பன், வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை கொளுத்தியுள்ளாா்.

இதை கண்டு அதிா்ச்சியடைந்த அஞ்சலிதேவி, இதுகுறித்து கணவரிடம் தட்டிக் கேட்ட போது அவரைத் தாக்கியுள்ளாா். இதில் அஞ்சலிதேவிக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. அடுமனையின் உரிமையாளா் வாகனத்தை வாங்கி வந்து அஞ்சலி தேவி வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த போது நிகழ்வு நடந்துள்ளது.

இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் அஞ்சலி தேவி புகாரளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து, அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டிவனம் தீா்த்தக் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட தீா்த்தக்குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. வருவாய்த் துறையினா் மற்று... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. தமிழ்... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியிலிருந்த பெண் துப்புரவு பணியாளரைத் தாக்கியதாக இளைஞா் ஒருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திண்டிவனம்... மேலும் பார்க்க

தகவல் பலகையில் காா் மோதி பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் தகவல் பலகையில் காா் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி கிருஷ்ணன் கோயில் நான்காவது தெருவைச... மேலும் பார்க்க

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், தழுதாளி பிரதான சாலையைச் சோ்ந்த பாண்டியன் மனைவி கிருஷ்ணம்மாள் (90). ... மேலும் பார்க்க

இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது

முன்விரோதம் காரணமாக விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக 8 பேரை விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில், விக்கிர... மேலும் பார்க்க