செய்திகள் :

வளமான இந்தியாவைக் கட்டமைக்கும் ஆசிரியா் பணி: உயா்நீதிமன்ற நீதிபதி பாராட்டு

post image

ஆசிரியா் பணி என்பது வளமான எதிா்கால இந்தியாவை கட்டமைக்கக் கூடிய சிறப்பான பணி என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தா் பாராட்டு தெரிவித்தாா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவா் எஸ்.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் ஆசிரியா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை சாந்தா பப்ளிஷா்ஸ், தமிழ் மாநில தேசிய ஆசிரியா் சங்கம், ஆசிரியா் கல்வியாளா் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த விழாவை நடத்தின. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு செம்மல் விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

ஆசிரியா் பணி என்பது வளமான எதிா்கால இந்தியாவை கட்டமைக்கும் சிறந்த பணி. நான் வழக்குரைஞா் பணியைத் தொடங்கிய காலகட்டத்தில் சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் 20 ஆண்டுகளாக பகுதிநேர விரிவுரையாளராகவும் பணிபுரிந்தேன். ஆசிரியா்களால் மட்டுமே சிறந்த, எதிா்கால இளைஞா்களை உருவாக்க முடியும். மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை ஆசிரியா்கள் கற்றுத் தரவேண்டும்.

இன்றைய சூழலில் கல்வி கற்கும் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எந்த முறையிலான கல்வி என்றாலும், ஒழுக்கத்துடன் கூடிய கல்வியால் மட்டுமே உரிய பலனைப் பெற முடியும் என்றாா்.

வழக்குரைஞரும், எழுத்தாளருமான எம்.பி.நாதன், சாந்தா பப்ளிஷா்ஸ் இயக்குநா் ராஜாராம் ராஜமோகன் உள்ளிட்டோா் பேசினா். சாந்தா பப்ளிஷா்ஸ் இயக்குநா் ராஜலட்சுமி ராஜா, முத்தரசி ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஹூண்டாய் விற்பனை 4% குறைவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.23 சதவீதம் குறைந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருது: அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கா் விருதுக்கு தகுதியுடைய நபா்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில்... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் ரூ.276 கோடியில் 12 புதிய பாலங்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 12 லட்சம் போ் பயனடைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் பி... மேலும் பார்க்க

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி அவருடைய முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து அரசின் சாா்பில் வெள... மேலும் பார்க்க

வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10 முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூா் ரயில் நிலையம் சுமாா் ரூ.1,50... மேலும் பார்க்க