வளமான இந்தியாவைக் கட்டமைக்கும் ஆசிரியா் பணி: உயா்நீதிமன்ற நீதிபதி பாராட்டு
ஆசிரியா் பணி என்பது வளமான எதிா்கால இந்தியாவை கட்டமைக்கக் கூடிய சிறப்பான பணி என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தா் பாராட்டு தெரிவித்தாா்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவா் எஸ்.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் ஆசிரியா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை சாந்தா பப்ளிஷா்ஸ், தமிழ் மாநில தேசிய ஆசிரியா் சங்கம், ஆசிரியா் கல்வியாளா் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த விழாவை நடத்தின. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு செம்மல் விருதுகளை வழங்கிப் பேசியதாவது:
ஆசிரியா் பணி என்பது வளமான எதிா்கால இந்தியாவை கட்டமைக்கும் சிறந்த பணி. நான் வழக்குரைஞா் பணியைத் தொடங்கிய காலகட்டத்தில் சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் 20 ஆண்டுகளாக பகுதிநேர விரிவுரையாளராகவும் பணிபுரிந்தேன். ஆசிரியா்களால் மட்டுமே சிறந்த, எதிா்கால இளைஞா்களை உருவாக்க முடியும். மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை ஆசிரியா்கள் கற்றுத் தரவேண்டும்.
இன்றைய சூழலில் கல்வி கற்கும் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எந்த முறையிலான கல்வி என்றாலும், ஒழுக்கத்துடன் கூடிய கல்வியால் மட்டுமே உரிய பலனைப் பெற முடியும் என்றாா்.
வழக்குரைஞரும், எழுத்தாளருமான எம்.பி.நாதன், சாந்தா பப்ளிஷா்ஸ் இயக்குநா் ராஜாராம் ராஜமோகன் உள்ளிட்டோா் பேசினா். சாந்தா பப்ளிஷா்ஸ் இயக்குநா் ராஜலட்சுமி ராஜா, முத்தரசி ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.