செய்திகள் :

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ. 15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

post image

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் மொத்தம் ரூ. 15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில், ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளாா். ஏற்கெனவே ரூ. 7,020 கோடி மதிப்பிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜெர்மனி நிறுவனங்களுடன் கையொப்பமாகின.

இந்த நிலையில், பிரிட்டன் பயணத்தில் இதுவரை 7 நிறுவனங்களுடன் ரூ. 8,496 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

லண்டனில் இருந்து உற்சாகமான செய்தி. பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ஹிந்துஜா குழுமம், தமிழ்நாட்டில் மின்சார வாகனச் சந்தையில், பேட்டரி தயாரிப்பு நிறுவனம் அமைக்க ரூ. 7,500 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 1,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கவுள்ளது.

ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ’தமிழகம் வளர்கிறது’ திட்டத்தில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் ரூ. 15,516 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளோம். இது நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைகளை உருவாக்கவுள்ளது.

இவை வெறும் எண்கள் அல்ல, வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது திராவிட மாடலின் உத்வேக செயல்பாடு.” எனக் குறிப்பிட்டுள்ளார்

ஜெர்மனி

26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

ரூ. 7,020 கோடி மதிப்பிலான முதலீடுகள்

15,320 வேலைவாய்ப்புகள்

பிரிட்டன்

7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

ரூ. 8,496 கோடி மதிப்பிலான முதலீடுகள்

2,293 வேலைவாய்ப்புகள்

Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that a total of Rs. 15,516 crore in investments have been attracted during his visit to Germany and Britain.

இதையும் படிக்க : நெல்லை ரயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை!

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,000-ஐக் கடந்தது!

சென்னை: தங்கம் விலை வாரத்தின் இறுதி நாளான இன்று ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது.சென்னையில் காலை நேர நிலவரப்படி ஒரு கிராம்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் கெடு! இபிஎஸ் அவசர ஆலோசனை!

பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அ... மேலும் பார்க்க

நெல்லை ரயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை!

திருநெல்வேலி: திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு முன்பு வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், தப்பியோடிய மர்ம கும... மேலும் பார்க்க

சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை மாணவா்களிடம் வளா்க்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவா்களிடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை ஆசிரியா்கள் வளா்க்க வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆசிரியா் தின விழா சென்னை கோட்டூா்புர... மேலும் பார்க்க

பட்ட மேற்படிப்பு பயில ரூ.3.60 கோடி ஒதுக்கீடு: மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு

இஸ்லாமிய மாணவ, மாணவிகள் 10 போ் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயில, ரூ.3.60 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் தலை... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி: பெ. சண்முகம்

டிரம்ப் என்ற தனி நபரின் விருப்பு வெறுப்பால் விதிக்கப்பட்டுள்ள வரியால் இந்தியா பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். இந்தியா மீதான அமெர... மேலும் பார்க்க