செய்திகள் :

மோடி எனது நண்பர்; சிறந்த பிரதமர்! மாற்றிப் பேசும் டிரம்ப்!

post image

பிரதமர் நரேந்திர மோடியுடன் நண்பராக இருப்பேன், அவர் சிறந்த பிரதமர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்படாததாலும், எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததாலும் இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் அறிவித்தார்.

இதனால், இந்திய ஏற்றுமதியில் கடும் பாதிப்பை சந்தித்திருக்கும் சூழலில் சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் சீன, ரஷிய அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

மேலும், சீனா மற்றும் ரஷிய அதிபர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் தனித்தனியே நடத்தினார்.

இதனிடையே, மூவரும் இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்த டிரம்ப், ”இருண்ட சீனாவிடம் இந்தியாவையும் ரஷியாவையும் இழந்துவிட்டோம் எனத் தெரிகிறது, அவர்கள் ஒன்றாக நீண்டகால வளமான எதிர்காலத்தை கொண்டிருக்கட்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப்பிடம், இந்தியா குறித்து பல்வேறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.

இந்தியாவை சீனாவிடம் இழந்ததற்கான காரணம் என்ன?

நாங்கள் காரணம் இல்லை என்று நினைக்கிறேன். இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் நான் ஏமாற்றம் அடைந்தேன். அதுபற்றி அவர்களிடம் விளக்கினேன், ஏற்றுக்கொள்ளாததால் மிகப்பெரிய வரியை இந்தியாவுக்கு விதித்தோம். 50% என்பது அதிக வரிதான்.

இந்தியாவுடனான உறவைப் புதுப்பிப்பீர்களா?

கண்டிப்பாக செய்வேன், மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் சிறந்த பிரதமர். குறிப்பிட்ட நேரத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயானது சக்திவாய்ந்த உறவு, அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. நான் எப்போதும் மோடியுடன் நன்றாகப் பழகி வருகிறேன்.

US President Donald Trump said on Friday that he would be friends with Prime Minister Narendra Modi and that he is a great Prime Minister.

இதையும் படிக்க : நெல்லை ரயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை!

பெண்களை தொடக்கூடாது.. தலிபான்களின் உத்தரவால் துயரம்

நிலநடுக்கத்தை விடவும் கொடிய தலிபான் அரசின் அடக்குமுறையால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் பெண்களை தூக்க உதவியின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆப்கன் பெண்கள்.இடிபாடுகளில... மேலும் பார்க்க

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிப்பு: ஐ.நா.வில் இந்தியா

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்தது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ‘தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் தற்போதுள்ள சூ... மேலும் பார்க்க

பாக். முன்னாள் பிரதமரின் சகோதரியின் மீது முட்டை வீச்சு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின், சகோதரி அலீமா கானின் மீது, 2 பெண்கள் முட்டைகளை வீசியுள்ளனர். பாகிஸ்தானின் தெஹ்ரிக் - இ - இன்சாஃப் கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரா... மேலும் பார்க்க

சொத்து வரி விவகாரம்! பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜிநாமா!

சொத்து வரி விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தனது பதவியை இன்று (செப்.5) ராஜிநாமா செய்துள்ளார். பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர், சமீபத்தில் இங்கிலாந்தின... மேலும் பார்க்க

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து- 16 பேர் பலி

போர்ச்சுகலில் ஃபுனிகுலர் கேபிள் கார் தடம்புரண்டதில் 16 பேர் பலியாகினர்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் புகழ்பெற்ற ஃபுனிகுலர் கேபிள் கார் வியாழக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாக... மேலும் பார்க்க

இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!

இலங்கையில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நகரத்தின் அருகில் வெல்லவாயா பகுதியில் அமைந்துள்ள மலையின் மீது நேற்று (செப்.4) ... மேலும் பார்க்க