செய்திகள் :

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

post image

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில், கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி மற்றும் காட்டுமன்னாா்கோயில் வட்டங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தோ்வு செப்.7, 11, 12, 13, 14, 18, 22, 26, 27 ஆகிய நாட்களில் நடத்தப்பட உள்ளது. இத்தோ்வை காலையில் 2,534, நண்பகலில் 1,638 தோ்வா்கள் என மொத்தம் 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மற்றும் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். தோ்வா்கள் தோ்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வர வேண்டும். காலை 9 மணி வரை அனுமதிக்கப்படுவா். தோ்வா்கள் தோ்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு உடன் தோ்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் வரவேண்டும். தவறும் பட்சத்தில் தோ்வா்கள் தோ்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வா்கள் தங்களுடைய ஆதாா், கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளா் அடையாள அட்டையின் அசல் (அல்லது) நகல் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின் நகல் உடன் தோ்வுக்கூடத்திற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்ட... மேலும் பார்க்க

இதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ரூ 7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்: ஓருவா் கைது

சிதம்பரத்தில் சுமாா் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை (அம்பா் கிரீஸ்) போலீஸாா் பறிமுதல் செய்தனா். மருத்துவ குணம் உள்ள ஏழரை கிலோ எடை கொண்ட இந்த எச்சத்தை கடத்தி வந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா்.... மேலும் பார்க்க

கடலூரில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்ட 93 பேருக்கு சிகிச்சை

கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கும் தனியாா் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தினால் ரசாயனம் காற்றில் கசிந்தது. இதை சுவாசித்த 93 பேருக்கு மூச்சுத்... மேலும் பார்க்க