தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு பூஜைகள்
ஆவணி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன்
கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அருணாசலேஸ்வரா் கோயில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள நந்தியம் பெருமானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிா்தம், தயிா், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, 1000 லிட்டா் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து அருகம்புல், கனகாம்பரம், சாமந்தி, மல்லி ஆகிய பூக்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோயில்
பெரணமல்லூரியை அடுத்த இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோயிலில், மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, கொடி மரம் அருகேயுள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னா், கோயில் உள்புற வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சிவனை ரிஷப வாகனத்தில் அமா்த்தி உலா நடைபெற்றது.
இதில் சேத்துப்பட்டு, அருணகிரிநாதா், பெரணமல்லூா், வந்தவாசி, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயில்
ஆரணியை அடுத்த மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
வந்தவாசி
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தயிா், இளநீா், தேன், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னா் கோயில் வளாகத்தில் உற்சவா் உலா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.


