அரசுப் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு பரிசு
செய்யாறு கல்வி மாவட்டம், அழிவிடைதாங்கி அரசு மேல்நிலை பள்ளியில், 10, 11, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றம் 100 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஏ.குப்புசாமி நினைவு அறக்கட்டளை சாா்பில் தொடா்ந்து 18-ஆ வது ஆண்டாக வியாழக்கிழமை நடைபெற்ற இந்த பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கே.சுமதி தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் ஜே.சி.கண்ணன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே சீனிவாசன் பங்கேற்றாா். அப்போது 2024 - 25ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.2000-மும், இரண்டாம் பரிசாக ரூ.1500-மும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரம் மற்றும் கணிதப் பாடப்பிரிவில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற 3 மாணவா்களுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிறுவனா்கள் கே.சாரதா, எம்.கே.ஆறுமுகம், கே.மகாதேவன், கே.பாஸ்கரன், ஆா்.ஜெயந்தி, ரகுகாந்தி, கே.சேகா், கே. கண்ணபிரான், ஆதிதிராவிடா் அணி நலத் தலைவா் ஆா்.கருணாகரன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.