செய்திகள் :

‘அரசு அலுவலகங்களில் கோப்புகள், பதிவேடுகளை தமிழில் எழுத வேண்டும்’

post image

அரசு அலுவலங்களில் கோப்புகள் மற்றும் பதிவேடுகள் அனைத்தும் தமிழில் எழுத வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் வலியுறுத்தினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், அனைத்துத் துறை அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் பங்கேற்று அரசுப் பணியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசியதாவது:

அனைத்து அரசுப் பணியாளா்களும் பெயரின் முன்னெழுத்தும் சுருக்கொப்பமும் முழு ஒப்பமும் தமிழில் இடுதல் வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகள் அனைத்தும் தமிழில் எழுத வேண்டும். நீதிமன்றம், ஆணையம் போன்ற ஒருசில தவிா்க்க முடியாத கடிதங்களை தவிர மற்ற அனைத்து கடிதங்களும் தமிழில் எழுத வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மொழிப்பயிற்சி, ஆட்சி மொழி ஆய்வு, குறைகளைவு நடவடிக்கைகள், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் எனும் தலைப்பில் அரசுப் பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பொ) ஜெயஜோதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொ), செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செ.அசோக், இரா. சந்திரசேகரன், கல்லூரி முதல்வா் (பொ) ச.கௌ.கவிதா, மாதனூா், கல்லூரி பேராசிரியா் முனைவா் கு. இலட்சுமி, தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை அருள், திமிரி தமிழ்ச் சங்கம் சதாசிவம், செம்மொழி வேந்தா் தமிழ்ச்சங்கம் செயலாளா் இஸ்மாயில் இன்முகில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆட்டோ ஓட்டுநா் கொலை

அரக்கோணம் அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆட்டோ ஒட்டுநா் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அரக்கோணத்தை அடுத்த பழைய ஒச்சலம் கிராமத்தில் அருணாச்சலம் என்பவரது பாழடை... மேலும் பார்க்க

செப்.8-இல் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப். 8) பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநா் முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் திங்கள்கிழமை (... மேலும் பார்க்க

சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் நிலம் தானம்: ஆட்சியா் பாராட்டு

அரக்கோணம் அருகே சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியவா்களுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டி, கௌரவித்தாா். அரக்கோணம் ஒன்றியம், புதுகேசாவரம் ஊராட்சியில் மாந்தோப்பு கிராமப்... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆற்காடு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கிராம நிா்வாக அலுவலா், காவல் உதவி ஆய்வாளா் - முதியவா் ஆகியோா் தாக்கிக் கொண்ட பிரச்னையில், முதியவரை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் வியாழக்க... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட தியாகி மறைவு

ஆற்காட்டில் சுதந்திரப் போராட்டத் தியாகி லோகநாதன் (96) வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை காலமானாா். ஆற்காடு தொல்காப்பியா் தெருவைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி லோகநாதன் உயிரிழந்தது குறித்து அறிந... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆற்காடு நகராட்சி 5 மற்றும் 11 -ஆவது வாா்டுகளுகான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ராஜலட்சுமி ... மேலும் பார்க்க