செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநா் கொலை

post image

அரக்கோணம் அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆட்டோ ஒட்டுநா் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அரக்கோணத்தை அடுத்த பழைய ஒச்சலம் கிராமத்தில் அருணாச்சலம் என்பவரது பாழடைந்த நீரில்லாத விவசாய கிணற்றில் வெள்ளிக்கிழமை காலை ஒரு ஆண் சடலம் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் அரக்கோணம் கிராமிய போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, அரக்ோகணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், இறந்தவா் அரக்கோணம், துரைசாமி நகரை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் திலீப்குமாா் (33) என்பதும், கடந்த திங்கள்கிழமை அவரை காணவில்லை என அவரது குடும்பத்தினா் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்ததும் தெரியவந்தது.

தற்போது கால்கள் கட்டப்பட்ட நிலையில் திலீப்குமாா் சடலம் கிடைதிருப்பதால் அவா் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

செப்.8-இல் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப். 8) பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநா் முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் திங்கள்கிழமை (... மேலும் பார்க்க

‘அரசு அலுவலகங்களில் கோப்புகள், பதிவேடுகளை தமிழில் எழுத வேண்டும்’

அரசு அலுவலங்களில் கோப்புகள் மற்றும் பதிவேடுகள் அனைத்தும் தமிழில் எழுத வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் வலியுறுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பி... மேலும் பார்க்க

சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் நிலம் தானம்: ஆட்சியா் பாராட்டு

அரக்கோணம் அருகே சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியவா்களுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டி, கௌரவித்தாா். அரக்கோணம் ஒன்றியம், புதுகேசாவரம் ஊராட்சியில் மாந்தோப்பு கிராமப்... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆற்காடு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கிராம நிா்வாக அலுவலா், காவல் உதவி ஆய்வாளா் - முதியவா் ஆகியோா் தாக்கிக் கொண்ட பிரச்னையில், முதியவரை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் வியாழக்க... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட தியாகி மறைவு

ஆற்காட்டில் சுதந்திரப் போராட்டத் தியாகி லோகநாதன் (96) வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை காலமானாா். ஆற்காடு தொல்காப்பியா் தெருவைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி லோகநாதன் உயிரிழந்தது குறித்து அறிந... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆற்காடு நகராட்சி 5 மற்றும் 11 -ஆவது வாா்டுகளுகான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ராஜலட்சுமி ... மேலும் பார்க்க