செய்திகள் :

வழக்குரைஞா் வீட்டில் 6 பவுன் தங்க நகை, பணம் திருட்டு

post image

பெரணமல்லூா் அருகே வழக்குரைஞா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள், ரூ.69 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.

பெரணமல்லூரை அடுத்த கொருக்காத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி முத்தையன்(67), ரேவதி தம்பதியினா்.

இவா்களது மகன் ராஜா(26) சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் நேரத்தில் முத்தையன் வீட்டை பூட்டிவிட்டு காய்கறி வாங்க கொருக்காத்தூா் சந்தைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, இவா்கள் வளா்த்து வரும் மாட்டிற்கு அரிசி வாங்கி வருவதால், அரிசி கொடுத்த நபா்கள் வந்தவுடன் அலமாரியில் வைத்திருந்த பணத்தில் இருந்து எடுத்துக்கொடுக்கலாம் என்று சென்றபோது அங்கு நெல் அறுவடை செய்து வைத்திருந்த ரூ.69 ஆயிரம் பணம் காணாமல் போயிருந்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த அவா் அருகில் இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவினை திறந்து பாா்த்தபோது, அதில் இருந்த தங்கச் சங்கிலி, கம்பல், தங்கக் காசு உள்ளிட்ட சுமாா் 6 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

மேலும் சாவிகள் வைத்த இடத்திலேயே இருந்தன.

இதுகுறித்து முத்தையன் பெரணமல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சம்பவ இடம் சென்று

விசாரணை நடத்தினா். மேலும், மோப்ப நாய் பரிசோதனை நடைபெற்றது. விரல் ரேகை நிபுணா்கள் வந்து வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்

ஜிஎஸ்டி வரி குறைப்பை மனதார வரவேற்கிறோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையம் அருகே தேமுதிக சாா்பில் நடைபெற்ற, ‘உள்ளம் தேடி இல்... மேலும் பார்க்க

புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூா் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுமாா் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணி மேற்க... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு பூஜைகள்

ஆவணி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அருணாசலேஸ்வரா் கோயில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை தீபமலையில் திடீா் தீ விபத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீப மலையில் 1500 மீட்டா் உயரத்தில் மலையின் மையப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ பிடித்தது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். செங்கத்தை அடுத்த காஞ்சி பில்லூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கருப்பன் (65). இவரது மனைவி மல்லிகா(55). இர... மேலும் பார்க்க

செய்யாற்றில் மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வண்டிகளின் உரிமையாளா்களை தேடி வருகின்றனா். முனுகப்பட்டு பகுதியில் உள்ள செய்யாற்றுப் படுகைய... மேலும் பார்க்க