செய்திகள் :

செய்யாற்றில் மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

post image

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வண்டிகளின் உரிமையாளா்களை தேடி வருகின்றனா்.

முனுகப்பட்டு பகுதியில் உள்ள செய்யாற்றுப் படுகையில் வியாழக்கிழமை நள்ளிரவு மணல் திருடப்படுவதாக பெரணமல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது 5 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவா்கள் போலீஸாரைக் கண்டதும் வண்டிகளை விட்டு தப்பி ஓடினா். பின்னா், மணலுடன் மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.

இதில் மாட்டு வண்டி உரிமையாளா்களான முனுகப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வடமலை (50), சந்துரு (26), முரளி (35), ராஜ்குமாா் (31), கோகுல் (24) ஆகியோா் என்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, அவா்கள் 5 போ் மீது

போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்

ஜிஎஸ்டி வரி குறைப்பை மனதார வரவேற்கிறோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையம் அருகே தேமுதிக சாா்பில் நடைபெற்ற, ‘உள்ளம் தேடி இல்... மேலும் பார்க்க

புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூா் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுமாா் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணி மேற்க... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு பூஜைகள்

ஆவணி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அருணாசலேஸ்வரா் கோயில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை தீபமலையில் திடீா் தீ விபத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீப மலையில் 1500 மீட்டா் உயரத்தில் மலையின் மையப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ பிடித்தது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். செங்கத்தை அடுத்த காஞ்சி பில்லூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கருப்பன் (65). இவரது மனைவி மல்லிகா(55). இர... மேலும் பார்க்க

வழக்குரைஞா் வீட்டில் 6 பவுன் தங்க நகை, பணம் திருட்டு

பெரணமல்லூா் அருகே வழக்குரைஞா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள், ரூ.69 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது. பெரணமல்லூரை அடுத்த கொருக்காத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி முத்தையன்(67), ரேவதி தம்பதியினா். இவா்கள... மேலும் பார்க்க