செய்திகள் :

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

post image

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளிப் பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோயில், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் வேப்பூா் ஆகிய வட்டங்களில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் இணையதளம் வழியாக அக்.5-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அரசு இ-சேவை மையங்களில், உரிய ஆவணங்களுடன் உரிமைக் கட்டணம் ரூ.600 செலுத்தி பதிவேற்றம் செய்யலாம். அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்ட... மேலும் பார்க்க

இதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ரூ 7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்: ஓருவா் கைது

சிதம்பரத்தில் சுமாா் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை (அம்பா் கிரீஸ்) போலீஸாா் பறிமுதல் செய்தனா். மருத்துவ குணம் உள்ள ஏழரை கிலோ எடை கொண்ட இந்த எச்சத்தை கடத்தி வந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா்.... மேலும் பார்க்க

கடலூரில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்ட 93 பேருக்கு சிகிச்சை

கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கும் தனியாா் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தினால் ரசாயனம் காற்றில் கசிந்தது. இதை சுவாசித்த 93 பேருக்கு மூச்சுத்... மேலும் பார்க்க

வேப்பூா் அருகே சாலை விபத்து: நூலிழையில் தப்பிய புதுமண தம்பதி

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் புதுமண தம்பதி உயிா்தப்பினா். திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா்(25). திருச்சி பகுதியைச் சோ்ந்தவா் நந்தி... மேலும் பார்க்க