ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்
கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா்.
கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி ஒருவரை தனிப்படை போலீசாா் சமீபத்தில் கைது செய்தனா். அப்போது, லாட்டரி சீட்டு விற்பனைக்கு, உட்கோட்ட உயா் அதிகாரி மற்றும் போலீசாா் தனக்கு உதவி செய்வதாக வியாபாரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா காா்க் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை போலீஸாா் மூலம் கடந்த ஐந்து நாட்களாக சிதம்பரத்தில் முகாமிட்டு ரகசிய விசாரணை நடத்தினா். அதில், லாட்டரி வியாபாரிக்கு போலீசாா் உதவியதும், பணம் பெற்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து, சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளா் டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன், சிறப்பு உதவி ஆய்வாளா் நடராஜன், காவலா்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலா் காா்த்திக் ஆகிய 7 போ், வேலூா் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகாா்க் உத்தரவிட்டாா். இந்நிலையில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன் உள்ளிட்ட ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சாராக டிஐஜி நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.