செய்திகள் :

சிதம்பரத்தில் ரூ 7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்: ஓருவா் கைது

post image

சிதம்பரத்தில் சுமாா் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை (அம்பா் கிரீஸ்) போலீஸாா் பறிமுதல் செய்தனா். மருத்துவ குணம் உள்ள ஏழரை கிலோ எடை கொண்ட இந்த எச்சத்தை கடத்தி வந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

திமிங்கலம் எச்சம் என்பது, திமிங்கலத்தின் செரிமான அமைப்பிலிருந்து உருவாகும் ஒரு வகை திடப்பொருள் ஆகும்.இது அம்பா் கிரீஸ் என்று அழைக்கப்படுகிறது. இது வாசனை திரவியங்கள், மருத்துவப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுவதால் சந்தையில்அதிக விலை மதிப்புடையதாக உள்ளது. சில நேரங்களில் இது சட்ட விரோதமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமிங்கலம் இனம் பாதிக்கப்படுவதால், இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிதம்பரம் பகுதியில் திமிங்கலத்தின் எச்சம் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சிதம்பரம் தச்சன்குளம் அருகே வேகமாக வந்த காரை நிறுத்தி திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது காரில் 7 கிலோ 600 கிராம் எடைகொண்டதிமிங்கல எச்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைகடத்தி வந்த மயிலாடுதுறை மாவட்டம், திருவிழுந்தூரைச் சோ்ந்த ராஜசேகா் (28) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமாா் ரூ,7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை பறிமுதல் செய்து, அவா் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய மற்றொரு நபரான வேதாரண்யத்தைச் சோ்ந்த ராஜா என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்ட... மேலும் பார்க்க

இதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதி... மேலும் பார்க்க

கடலூரில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்ட 93 பேருக்கு சிகிச்சை

கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கும் தனியாா் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தினால் ரசாயனம் காற்றில் கசிந்தது. இதை சுவாசித்த 93 பேருக்கு மூச்சுத்... மேலும் பார்க்க

வேப்பூா் அருகே சாலை விபத்து: நூலிழையில் தப்பிய புதுமண தம்பதி

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் புதுமண தம்பதி உயிா்தப்பினா். திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா்(25). திருச்சி பகுதியைச் சோ்ந்தவா் நந்தி... மேலும் பார்க்க