செய்திகள் :

முத்திரையில்லாமல் பயன்படுத்தியதாக 20 தராசுகள் பறிமுதல்

post image

வாணியம்பாடியில் முத்திரையில்லாமல் பயன்படுத்தியதாக 20 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை தொழிலாளா் ஆணைகளின்படி, சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை தொழிலாளா் உதவி ஆணையா் ரவி ஜெயராம் (அமலாக்கம்) தலைமையில், திருப்பத்தூா் முத்திரை ஆய்வாளா் விஜயராஜ், வாணியம்பாடி தொழிலாளா் உதவி ஆய்வாளா் சில்வியா, உதவியாளா் ஆரிப் மற்றும் அலுவலக பணியாளா்கள் கொண்ட குழுவினா் வாணியம்பாடி நகராட்சி பகுதியில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது வாரச் சந்தை, கச்சேரி ரோடு, பூக்கடை பஜாா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 75-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் சில கடைகளில் முத்திரையில்லாத தராசுகள் (எடையளவு மிஷின்) பயன்படுத்திக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. பின்னா் அங்கிருந்த முத்திரையில்லாத 20 எடையளவு தராசுகளை பறிமுதல் செய்து, அலுவலகத்துக்கு கொண்டு வந்து, அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கடைகளில் முத்திரையில்லாத எடையளவு (தராசுகள்) பயன்படுத்தக் கூடாது எனவும், மீறி பயன்படுத்தினால் அதிகாரிகள் குழுவினா் திடீா் சோதனையின் போது கண்டறியப்பட்டால் ரூ. 5,000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடா்ந்து எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவினரின் சோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறினா்.

ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. ஆம்பூா் நகராட்சி 11 மற்றும் 13 ஆகிய வாா்டு பகுதிகளுக்கான முகாம் ஐஇஎல்சி காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆம்பூா... மேலும் பார்க்க

ஆம்பூா் புத்தகத் திருவிழா தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சாா்பாக 10 நாள் புத்தகக் கண்காட்சி ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அறி... மேலும் பார்க்க

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்க அரசின் அதிகபட்ச வரிவிதிப்பை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, திருப்பத்தூா் வட்டச் செயலா் காமராஜ் தலைமை வகி... மேலும் பார்க்க

தேவஸ்தானம் ஊராட்சியில் 27 மனுக்கள் மீது உடனடி தீா்வு

ஆலங்காயம் ஒன்றியம், தேவஸ்தானம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பெரியப்பேட்டை கோயில் மண்டப வளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் அன்பு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, சூரவேல... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க ஆம்பூா் கிளை ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைவா் கே.எஸ். உமாபதி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பி.சிவாஜிராவ், பி. அண்ணாமலை,... மேலும் பார்க்க

ரூ.37 லட்சத்தில் பள்ளிக் கட்டடப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சியில் ரூ. 37 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி புதிய கட்டடம் கட்டும் பணிகளை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மா... மேலும் பார்க்க