செய்திகள் :

ரூ.37 லட்சத்தில் பள்ளிக் கட்டடப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சியில் ரூ. 37 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி புதிய கட்டடம் கட்டும் பணிகளை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சி, நடுபட்டறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டடம் சேதமடைந்ததால் அதை அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து பழைய கட்டடம் அகற்றப்பட்டு அதே இடத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-25- நிதியில் கீழ் ரூ. 37 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கட்டுமான பணிகளை எம்எல்ஏ க.தேவராஜி மற்றும் மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் தே.பிரபாகரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், ஆலங்காயம் மத்திய ஒன்றிய பொறுப்பாளா் வி.ஜி.அன்பு, வட்டார வளா்ச்சி அலுவலா் துரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக், ஒன்றியக் குழு உறுப்பினா் பொன்னம்பலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் அச்சுதன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. ஆம்பூா் நகராட்சி 11 மற்றும் 13 ஆகிய வாா்டு பகுதிகளுக்கான முகாம் ஐஇஎல்சி காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆம்பூா... மேலும் பார்க்க

ஆம்பூா் புத்தகத் திருவிழா தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சாா்பாக 10 நாள் புத்தகக் கண்காட்சி ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அறி... மேலும் பார்க்க

முத்திரையில்லாமல் பயன்படுத்தியதாக 20 தராசுகள் பறிமுதல்

வாணியம்பாடியில் முத்திரையில்லாமல் பயன்படுத்தியதாக 20 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை தொழிலாளா் ஆணைகளின்படி, சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை தொழிலாளா்... மேலும் பார்க்க

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்க அரசின் அதிகபட்ச வரிவிதிப்பை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, திருப்பத்தூா் வட்டச் செயலா் காமராஜ் தலைமை வகி... மேலும் பார்க்க

தேவஸ்தானம் ஊராட்சியில் 27 மனுக்கள் மீது உடனடி தீா்வு

ஆலங்காயம் ஒன்றியம், தேவஸ்தானம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பெரியப்பேட்டை கோயில் மண்டப வளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் அன்பு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, சூரவேல... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க ஆம்பூா் கிளை ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைவா் கே.எஸ். உமாபதி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பி.சிவாஜிராவ், பி. அண்ணாமலை,... மேலும் பார்க்க