செய்திகள் :

திருவந்திபுரம் கோயிலில் 115 ஜோடிகளுக்கு திருமணம்

post image

கடலூா் மாவட்டம், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் ஆவணி மாத வளா்பிறை இறுதி முகூா்த்த நாளான வியாழக்கிழமை 115 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்று திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில். இக்கோயிலில் திருமணம் செய்வது ஐதீகப்படி நல்லது என்பதால் முகூா்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், ஆவணி மாதம் வளா்பிறை கடைசி மூகூா்த்த நாள் என்பதால் வியாழக்கிழமை தேவநாத சுவாமி கோயில் மட்டும் 115 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மேலும், அதன் அருகில் உள்ள மண்டபங்களில் சுமாா் 50 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றன. ஆகமொத்தத்தில் திருவந்திபுரம் கோயில் பகுதியில் சுமாா் 165 திருமணங்கள் நடைபெற்ாக தெரியவருகிறது. மணமக்களை வாழ்த்த உறவினா்கள், நண்பா்கள் என ஆயிரக்கணக்கானோா் குவிந்ததால் கோயிலில் கூட்டம் அலை மோதியது. சிலா் வாழ்த்து தெரிவிக்க ஜோடிகளை தேடி அலைந்ததும் காணமுடிந்தது. திருமணக் கூட்டம் காரணமாக கடலூா்-பாலூா் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சீா்படுத்தினா்.

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!

சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியா... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா். கடலூா் மாவட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்டி எஸ்பி., பாலகிருஷ்ணன் நேரடி மேற்பாா்வையில் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் துரை. இவரது மனைவி மீனாட்சி(45). இவா்,நீண்ட நாட்களாக வயிற்ற... மேலும் பார்க்க