செய்திகள் :

ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தங்கள்... புதிய குழப்பங்களை உண்டாக்காமல் இருக்கட்டும்!

post image

சமீபத்திய சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி பேசியபடியே, 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி, வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் 5%, 18% என இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு 8 வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை ஜி.எஸ்.டி கவுன்சில் 56 முறை கூடி ஆலோசித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் கொண்டுவரப்படும் மாற்றங்கள்... புதிய குழப்பங்களும், புதிய குளறுபடிகளுமாகத்தான் இருந்திருக்கின்றன.

இதனால், பொதுமக்கள், தொழில்துறையினர் மற்றும் வரித்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டதோடு அல்லாமல், நாட்டின் வளர்ச்சியும் கணிசமாகப் பாதிப்புக்குள்ளானது. இது தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளையும், விமர்சனங்களையும், கண்டனங்களையும் ஏறெடுத்தும் பார்க்காத மத்திய அரசு, திடீரென ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

‘‘இத்தனை ஆண்டுகளாக மெத்தனமாக இருந்த அரசு, இப்போது இந்த மாற்றத்தைக் கொண்டு வர என்ன காரணம்? பொருளாதார மந்த நிலையா, கடன் அதிகரிப்பா, குடும்பங்களின் சேமிப்புக் குறைவதா, பீகார், அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களா, ட்ரம்ப்பின் வரி விதிப்பா அல்லது இவை எல்லாமுமா?’’ என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுப்பியுள்ள கேள்விகள், பலருக்குமே எழத்தான் செய்கின்றன.

ஆனாலும், “அவற்றையெல்லாம் தாண்டி இந்த ஜி.எஸ்.டி சீர்திருத்தம் வரவேற்க வேண்டிய ஒரு விஷயமாகவே இருக்கிறது. வேலைவாய்ப்பு, வருமானம் எல்லாம் வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், விலைவாசி உயர்வால் மக்கள் அத்தியாவசிய பொருள்களுக்கே அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. கடன் சுமைக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. சேமிக்கவும், காப்பீடு எடுக்கவும்கூட யோசிக்க வேண்டியிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் இந்த ஜி.எஸ்.டி குறைப்பு நல்ல தீர்வைக் கொடுக்கும். அதேசமயம், இதன் எதிர்விளைவாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

2024-25 நிதி ஆண்டில் நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி வசூல் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல். வரி வருவாய்தான் அரசுகளின் நலத்திட்டங்களுக்கும், உள்கட்டமைப்புச் செலவினங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. எனவே, இந்த வரி வருவாய் குறைவதன் மூலம் ஏற்படவிருக்கும் எதிர் விளைவுகளை எல்லாம் மத்திய அரசு ஏற்கெனவே யோசித்தே இந்த முடிவுக்கு வந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த வரிக் குறைப்பின் பலன், மக்களுக்குச் செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். இல்லாவிட்டால், புதிய குழப்பங்கள் உருவாவதைத் தவிர்க்கவே முடியாது!

- ஆசிரியர்

``2026-ல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார், ஆனால்; ஓபிஎஸ், டிடிவி இருவரும்'' - அண்ணாமலை கணிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக... மேலும் பார்க்க

ADMK: ``செங்கோட்டையன் சொல்வது நல்லதுதான்; அரசியலில் எதுவும் நடக்கலாம்'' - பாஜக நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்... மேலும் பார்க்க

ADMK: ``செங்கோட்டையனின் வேண்டுகோள்; நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம்'' -ஓபிஎஸ் பதில்

செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்... மேலும் பார்க்க

``அதிமுக தொண்டர்களுக்கு வணக்கம்'' -செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்

சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை அ.தி.மு.க-வில் சேர்க்க முடியாது என்று கறாராக ஓரம் கட்டிவிட்டு, பல்வேறு முரண்பாடுகளுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து 2026 தேர்தலை சந்திக்கலாம் என்று வியூகம் ... மேலும் பார்க்க

``பெரியாருக்கு என் கையால் சோறு பரிமாறியிருக்கிறேன்'' - லண்டனில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.இந்தப் பயணத்தின் போது, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தோட்ட தரணியின் கை ... மேலும் பார்க்க

"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்!

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் போராடி 13-ம் தேதி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள் இன்று (செப்டம்பர் 4) காலையில் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் கூடியிருந்தனர்.தகவலறி... மேலும் பார்க்க