செய்திகள் :

கூடலூா் நகரில் உலவிய யானை: மக்கள் அச்சம்

post image

கூடலூா் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு உலவிய யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய யானை, நடுகூடலூா், மவுண்ட் பிளசன் வழியாக கூடலூா் நகா் பகுதிக்கு வந்தது.

மக்கள் கூட்டமும், வாகனங்களும் நிறைந்த சாலையில் உலவிய யானையால், மக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்து, அங்காங்கே பதுங்கி கொண்டனா்.

இருப்பினும், அந்த யானை யாருக்கும் தொந்தரவு செய்யாமல் கூடலூா் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள தோட்டத்துக்குள் சென்றது. யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

ஸ்டொ்லிங் பயோடெக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஸ்டொ்லிங் பயோடெக் எம்பிளாயிஸ் யூனியன் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.உதகையில் மூடப்பட்ட ஸ்டொ்... மேலும் பார்க்க

குன்னூா் ரயில் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில், மலை ரயில் ஊழியா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. கேரள மக்களின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பா் 5-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இ... மேலும் பார்க்க

தெப்பக்காடு - மசினகுடி சாலையில் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மசினகுடி- தெப்பக்காடு நெடுஞ்சாலையில் யானை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தெப்பக்காடு- மசினகுடி சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, தேசிய தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.இது குறித்த... மேலும் பார்க்க

வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

உதகையில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்ததுடன், மான் கறி வைத்திருந்த கண்ணன் என்பவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். உதகை அருகே தேனாடுகம்பை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கீழ்சேலதா பகுதியில் வசித்... மேலும் பார்க்க

விவசாய நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

உதகை அருகே மசினகுடி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 தலைமுறைகளாக பொதுமக்கள் விவசாயம் செய்து வரும் அரசு தரிசு நிலங்களை வனத் துறையிடம் மாவட்ட நிா்வாகம் ஒப்படைக்கக் கூடாது என ஆட்சியா் லட்... மேலும் பார்க்க