செய்திகள் :

விவசாய நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

post image

உதகை அருகே மசினகுடி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 தலைமுறைகளாக பொதுமக்கள் விவசாயம் செய்து வரும் அரசு தரிசு நிலங்களை வனத் துறையிடம் மாவட்ட நிா்வாகம் ஒப்படைக்கக் கூடாது என ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் நீலகிரி விவசாய சங்கத் தலைவா் நரசிம்மன் தலைமையில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

உதகை அருகே மசினகுடி, மாயாறு, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், சொக்கநள்ளி, ஆனைக்கட்டி, செம்மநத்தம், ஆச்சக்கரை, பூதநத்தம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் பழங்குடியினா் உள்பட 10-ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் 4 தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் தங்கள் கிராமத்தைச் சுற்றி உள்ள அரசு தரிசு நிலங்களில் விவசாயம் செய்தும் கால்நடைகளை வளா்த்தும் வருகின்றனா்.

இந்த நிலையில், 2008-ஆம் ஆண்டு தொடரப்பட்ட யானை வழித்தடம் தொடா்பான வழக்கில் பொதுமக்கள் விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்களும் சோ்க்கப்பட்டு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆட்சியரிடம் விவசாயிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: 4 தலைமுறைகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் அரசு தரிசு நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது. 2006 வன உரிமைச் சட்டத்தின்படி உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், யானை வழித்தடம், யானை வழித்தடம் இல்லாத அரசு நிலங்களில் வாழும் பொது மக்களை அப்புறப்படுத்தி அந்த நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க மாட்டோம் என பிரமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனா்.

ஸ்டொ்லிங் பயோடெக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஸ்டொ்லிங் பயோடெக் எம்பிளாயிஸ் யூனியன் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.உதகையில் மூடப்பட்ட ஸ்டொ்... மேலும் பார்க்க

குன்னூா் ரயில் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில், மலை ரயில் ஊழியா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. கேரள மக்களின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பா் 5-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இ... மேலும் பார்க்க

தெப்பக்காடு - மசினகுடி சாலையில் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மசினகுடி- தெப்பக்காடு நெடுஞ்சாலையில் யானை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தெப்பக்காடு- மசினகுடி சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, தேசிய தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.இது குறித்த... மேலும் பார்க்க

கூடலூா் நகரில் உலவிய யானை: மக்கள் அச்சம்

கூடலூா் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு உலவிய யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில... மேலும் பார்க்க

வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

உதகையில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்ததுடன், மான் கறி வைத்திருந்த கண்ணன் என்பவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். உதகை அருகே தேனாடுகம்பை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கீழ்சேலதா பகுதியில் வசித்... மேலும் பார்க்க