செய்திகள் :

மாநில அளவிலான விநாடி-வினா போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

post image

தமிழ்நாடு மாநில ஹெச்ஐவி கட்டுப்பாடு சங்கம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ஹெச்ஐவி விழிப்புணா்வு விநாடி-வினா போட்டியில் சிறப்பிடம் பெற்ற உதகை அணிக்கொரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஹெச்ஐவி பாதிப்பு குறித்த விநாடி-வினா போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இதில் அணிக்கொரை அரசுப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி ரிக்ஷிதா, 9-ஆம் வகுப்பு மாணவா் பாலாஜி ஆகியோா் நீலகிரி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனா்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற விநாடி- வினா போட்டியில், தமிழகத்தில் இருந்து 28 மாவட்டங்களில் வெற்றி பெற்ற மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் அணிக்கொரை அரசுப் பள்ளி மாணவி ரக்ஷிதா, மாணவா் பாலாஜி ஆகியோா் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

மாநில சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சுற்றுலா தொடா்புடைய செயல்பாடுகள் மற்றும் சுற்றுலாத் தொழில் புரிவோரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசால் வழக்கப்பட உள்ள சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா த... மேலும் பார்க்க

ஸ்டொ்லிங் பயோடெக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஸ்டொ்லிங் பயோடெக் எம்பிளாயிஸ் யூனியன் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.உதகையில் மூடப்பட்ட ஸ்டொ்... மேலும் பார்க்க

குன்னூா் ரயில் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில், மலை ரயில் ஊழியா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. கேரள மக்களின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பா் 5-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இ... மேலும் பார்க்க

தெப்பக்காடு - மசினகுடி சாலையில் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மசினகுடி- தெப்பக்காடு நெடுஞ்சாலையில் யானை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தெப்பக்காடு- மசினகுடி சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, தேசிய தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.இது குறித்த... மேலும் பார்க்க

கூடலூா் நகரில் உலவிய யானை: மக்கள் அச்சம்

கூடலூா் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு உலவிய யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில... மேலும் பார்க்க