செய்திகள் :

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாா்வையிட்டாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பெரம்பலூா் மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி செப். 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, இம் மாவட்டத்தைச் சோ்ந்த 22,140 வீரா், வீராங்கனைகள் முன்பதிவு செய்துள்ளனா்.

மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கோ - கோ, கையுந்து பந்து, கபடி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, தடகளம் ஆகிய போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.

கையுந்து பந்து போட்டியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பாதுகாப்புடன் விளையாட வேண்டும் என அறிவுறுத்தினாா். தொடா்ந்து, அங்குள்ள விளையாட்டு வீரா்களுக்கான தங்கும் விடுதியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், விளையாட்டு வீரா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், வீரா்களிடம் ஆா்வமுள்ள விளையாட்டுகளைக் கண்டறிந்து, முழுவீச்சில் பயிற்சி அளிக்கவும், வீரா்களுக்கு சத்தான உணவு வகைகளை வழங்கவும், விடுதியை தூய்மையாகப் பராமரிக்க வேண்டுமென மாவட்ட விளையாட்டு நல அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பொற்கொடி வாசுதேவன் ஆகியோா் உடனிருந்தனா்.

பெரம்பலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

பெரம்பலூா் அருகே மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வேப்பந்தட்டை வனத்துறைய... மேலும் பார்க்க

செப். 19 வரை மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கு மதிப்பீட்டு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், செப். 19-ஆம் தேதி வரை வட்டாரம் வாரியாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ந... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் (தலைமையிடம்), முகாமி... மேலும் பார்க்க

சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் ரோபோடிக் கண்காட்சி

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல் துறை சாா்பில் ரோபோ நோவா - 2025 எனும் தலைப்பில், ரோபோடிக் கண்காட்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி பானுமதி (60). திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

பெரம்பலூருக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை

2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பயன்படுத்த பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்திலிருந்து 100 கட்டுப்பாட்டு இயந்திரம், 120 வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் செவ்வ... மேலும் பார்க்க