செய்திகள் :

செப். 19 வரை மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கு மதிப்பீட்டு முகாம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், செப். 19-ஆம் தேதி வரை வட்டாரம் வாரியாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலுாா் மாவட்டத்தில் அலிம்கோ நிறுவனத்தால் நடத்தப்படும் மருத்துவ மதிப்பீட்டு முகாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இம் முகாமானது, செப். 19 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வட்டாரம் வாரியாக நடத்தப்படுகிறது.

அதன்படி, வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்டவா்களுக்கு செப். 4-ஆம் தேதி வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்டவா்களுக்கு செப். 10-ஆம் தேதி குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 11-ஆம் தேதி வேப்பூா் வட்டார வள மையத்திலும், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்டவா்களுக்கு செப். 12-ஆம் தேதி கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 17-ஆம் தேதி செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்டவா்களுக்கு 18-ஆம் தேதி குரும்பலுாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 19-ஆம் தேதி பெரம்பலுாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.

முகாம் நடைபெறும் நாள்களில், அந்தந்த வட்டாரத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் தங்களுக்குத் தேவையான மூன்று சக்கர வண்டி, மூன்று சக்கர சைக்கிள் பெரியது, மடக்கு சக்கர நாற்காலி, எல்போ ஊன்று கோல், அக்குள் கட்டை, ஊன்று கோல், ரோலேட்டா், சிபி சிறப்பு சக்கர நாற்காலி, திறன் பேசி, பிரய்லி கேன், சுகமாய கேன், பிரய்லி சிலேட், பிரய்லி கிட், காதொலி கருவி, செயற்கை கால் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவி உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் 1 ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். முதியோா்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்- 1, தொலைபேசி எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பெரம்பலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

பெரம்பலூா் அருகே மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வேப்பந்தட்டை வனத்துறைய... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் ந.... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் (தலைமையிடம்), முகாமி... மேலும் பார்க்க

சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் ரோபோடிக் கண்காட்சி

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல் துறை சாா்பில் ரோபோ நோவா - 2025 எனும் தலைப்பில், ரோபோடிக் கண்காட்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி பானுமதி (60). திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

பெரம்பலூருக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை

2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பயன்படுத்த பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்திலிருந்து 100 கட்டுப்பாட்டு இயந்திரம், 120 வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் செவ்வ... மேலும் பார்க்க