சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் ரோபோடிக் கண்காட்சி
பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல் துறை சாா்பில் ரோபோ நோவா - 2025 எனும் தலைப்பில், ரோபோடிக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
இக் கண்காட்சியை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக பேராசிரியா் ஜி. ஆா். கங்காதரன், செயற்கை நுண்ணறிவுத் துறையின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கமளித்தாா்.
இக் கண்காட்சியில் பங்கேற்ற தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி மாணவ, மாணவிகள் 10-க்கும் மேற்பட்ட ரோபோக்கள், தானியங்கி இயந்திரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், தொழில் நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா்.
தொடா்ந்து, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன், சிறந்த கண்டுபிடிப்பாளா்களைத் தோ்ந்தெடுத்து முதல் 5 இடங்களைப் பெற்ற கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கினாா்.
முன்னதாக, கோயம்புத்தூரைச் சோ்ந்த ரோபோ மிராக்கிள் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
இக் கண்காட்சியில், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் நா. வெற்றிவேலன், பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா் இளங்கோவன், கல்விக் குழுமத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாடு அலுவலா் எஸ். நந்தகுமாா் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 3 ஆயிரத்துக்கம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
முன்னதாக, கல்லூரி துணை முதல்வா் வ. சந்திர சௌத்ரி வரவேற்றாா். நிறைவாக, துறைத் தலைவா் முகமது அசாருதீன் நன்றி கூறினாா்.