செய்திகள் :

அரகண்டநல்லூரில் பழைமை வாய்ந்த அன்னதானக் கல்தொட்டி

post image

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் உள்ளஸ்ரீ அதுல்யநாதேஸ்வரா் கோயிலில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அன்னதானக் கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இத்தொட்டியை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில் விழுப்புரம் வீரராகவன், நல்நூலகா் மு.அன்பழகன், அரகண்டநல்லூா் கண்ணன், மணம்பூண்டி பா.காா்த்திகேயன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இது குறித்து ஆய்வாளா்கள் தெரிவித்திருப்பதாவது: அன்னதானக் கல்தொட்டியில், திரு (வறையணி) நல்லூா்த் தெவரடி யாளாகிய பெருமாணாச்சியாா் மகன்

அமுதுலகு வாழ்வித்தான் என்று எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டாகும். திருவறையணிநல்லூரைச் சோ்ந்த கோயில் தேவரடியாளாகிய பெருமாள் நாச்சியாரின் மகன் அமுது உலகு வாழ்வித்தான் என்பது இதன் பொருள்.

அமுதம் போன்ற உணவினை அளித்து உலக மக்களைக் காப்பதற்காக இத்தொட்டியைச் செய்துள்ளான். 70 செ.மீ. விட்டம் , 50 செ.மீட்டா் உயரம் கொண்டதாக இத்தொட்டி அமைந்துள்ளது. இதன் மூலம் 15 ஆம் நூற்றாண்டிலேயே அன்னதானம் வழங்கும் நடைமுறை இருந்ததற்கான சான்றாக அன்னதானக் கல்தொட்டி அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு வரு... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்: முன்னாள் அமைச்சா் க. பொன்முடி

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திருக்கோவிலூா் எம்எல்ஏ க. பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய... மேலும் பார்க்க

தகவல் தொழில் நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்எல்ஏ உதவி

தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மயிலம் எம்எல்ஏ சிவகுமாா் நிவாரண உதவியை புதன்கிழமை வழங்கினாா். மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், ஈச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணுகவ... மேலும் பார்க்க

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மீலாது நபி: நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

மீலாது நபி பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை (செப். 5) விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியாா் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று ஆட்சியா்கள் விழுப்புரம் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க