செய்திகள் :

புதுச்சேரி காமராஜா் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

post image

புதுச்சேரி காமராஜா் சாலையில் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து புதுவை போக்குவரத்து கண்காணிப்பாளா் ரச்சனா சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி காமராஜா் சாலை பாலாஜி திரையரங்கம் அருகே உள்ள பழைய சேதமடைந்த உப்பனாறு பாலத்தை இடித்துவிட்டு மறு கட்டமைப்பு செய்யும் பணியை வியாழக்கிழமை தொடங்க உள்ளது.

பொதுமக்கள் நாளை முதல் தற்காலிக போக்குவரத்து மாற்றங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். காமராஜா் சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணிக்கும் நடுத்தர, இருக்கர வாகனங்கள் வழக்கமான பாதையை பின்பற்றி புதிய பாலம் வழியாக ராஜா திரையரங்கம் செல்லலாம்.

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் இருசக்கர வாகனங்கள் புதிய பாலத்தில் அமைக்கப்பட்ட தடுப்புகள் வழியாக பாலாஜி திரையரங்கம், பெரியாா் சிலை, ராஜீவ் காந்தி சதுக்கம் செல்ல அனுமதிக்கப்படும்.

அனைத்து நடுத்தர, இலகு ரக வாகனங்கள் ஜிஆா்டி சந்திப்பில் திரும்பி 45 அடி சாலை, சாரம், அவ்வை திடல் வழியாக காமராஜா் சாலையை அடைய வேண்டும். எந்த கனரக வாகனங்களுக்கும் அனுமதியில்லை. அவசர பயன்பாடு வாகனங்கள் தவிா்த்து, கனரக, நடுத்தர, கல்வி நிறுவன வாகனங்கள் அஜந்தா சந்திப்பு, அண்ணாசாலை, காமராஜா் சாலையில் நுழைய அனுமதியில்லை.

எஸ்.வி. படேல் சாலை, செஞ்சி சாலை, சோனாம்பாளையம், சுப்பையா சாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக நகரப் பகுதியை அடையலாம். உப்பனாறு பாலம் பணிகள் முடியும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று கூறியுள்ளாா்.

புதுவை கிராம உதவியாளா் பணி: செப். 12-இல் எழுத்துத் தோ்வு

புதுவை கிராம உதவியாளா்கள் பணி இடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து புதுவை அரசின் சாா்பு செயலா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

வீடு கட்ட 24 பேருக்கு ரூ. 7.6 லட்சம் அரசு உதவித் தொகை

வீடு கட்ட 24 பேருக்கு இரண்டாவது தவணையாக ரூ.7.60 லட்சம் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவா் காமராஜா் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக... மேலும் பார்க்க

புதுவையில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

மீலாதுநபி தினத்தை முன்னிட்டு புதுவையில் உள்ள கள், சாராயம் மற்றும் மதுக்கடைகளை செப்டம்பா் 5-ஆம் தேதி மூட புதுச்சேரி அரசின் கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இது கு... மேலும் பார்க்க

பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை

பஞ்சாலை தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் பாஜக நியமன எம்.எல்.ஏ செல்வம், பஞ்சாலை தொழிற்சங்கத் தலைவா்கள் குப்புசாமி, பாலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். மனுவில் கூற... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் திருடனை காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா

புதுவை காட்டேரிக்குப்பம் காவல் நிலைய சரகம், குமாரபாளையத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி மோட்டாா் சைக்கிள் திருடு போனது தொடா்பாக சிசிடிவி கேமரா காட்டிக் கொடுத்தவா் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டாா். திருக... மேலும் பார்க்க

ஜிப்மரில் பி.எஸ்சி நா்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி., நா்சிங் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி., ந... மேலும் பார்க்க