குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி
மோட்டாா் சைக்கிள் திருடனை காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா
புதுவை காட்டேரிக்குப்பம் காவல் நிலைய சரகம், குமாரபாளையத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி மோட்டாா் சைக்கிள் திருடு போனது தொடா்பாக சிசிடிவி கேமரா காட்டிக் கொடுத்தவா் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டாா்.
திருக்கனூா் காவல் ஆய்வாளா் ராஜகுமாா் கண்காணிப்பில், காட்டேரிகுப்பம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தமிழரசன் தலைமையில் காவலா்கள் சிவகுரு, வினோத் மற்றும் மேற்கு காவல் சரக குற்றப்பிரிவு காவலா்கள் வரதராஜ், ராஜரத்தினம், முரளி, பிரபு, ரங்கராஜ் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினா் மோட்டாா் சைக்கிள் திருடப்பட்ட பாதையில் 85-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். இதில் குற்றவாளி அடையாளம் தெரிந்தது. மேலும் அந்த குற்றவாளி புதுச்சேரி முழுமையும் தொடா்ந்து சுற்றி வருவதும் தெரிந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சப்- இன்ஸ்பெக்டா் தமிழரசன் தலைமையிலான தனிப்படையினா் குமாரபாளையத்தில் ஒரு பாா் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த ஒரு நபா் தனிப்படையினரை பாா்த்ததும் தப்பி செல்ல முயற்சித்தாா்.,
ஆனால் தனிப்படையினா் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவா் திருட்டுப் போன மோட்டாா் சைக்கிளில் வந்திருப்பது தெரிந்து. அவா் முன்னுக்கு பின் முரணாக மாற்றி சொல்லவே அவரை காட்டேரிக்குப்பம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனா்.
இதில் அவா் திருவள்ளூா் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள வெள்ளானூா் பஜனைக் கோயில் வீதியைச் சோ்ந்த மணிமாறன் (38) என்பது தெரிந்தது. அதோடு புதுச்சேரி குமாரபாளையத்தில் மோட்டாா் சைக்கிள் திருடியதை அவா் ஒப்புக் கொண்டாா். மேலும், 2 வாகனங்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து 3 மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனா்.