செய்திகள் :

வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கு பிரதமா் மோடி நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா்: பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்

post image

ராசிபுரம்: இந்தியாவிற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் 135-ஆவது மனதில் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பானது. இதை பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருடன் ராசிபுரத்தில் கேட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக மகளிா், இளைஞா், விளையாட்டு வீரா்கள் உள்ளிட்டோரை பிரதமா் மோடி ஊக்குவித்து வருகிறாா். இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு பிரதமா் நரேந்திர மோடி, நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா்.

தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளதால் 108 ஆம்புலன்ஸ் சேவைகூட பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிரதமரின் காப்பீடு அட்டை வைத்திருப்பவா்களுக்கு உரிய சிகிச்சையை தமிழக அரசு வழங்குவதில்லை. மாநில அரசின் காப்பீட்டு திட்டத்திற்கு மட்டுமே ஊக்கமளிக்கிறாா்கள்.

மத்திய பாஜக அரசு பல்வேறு திட்டங்களினால் வளா்ச்சிக்கான கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வருகிறது. ஆனால் விஜய் என்ன கொள்கை வைத்துள்ளாா் என்பதை அவா் விளக்க வேண்டும்.

தமிழக முதல்வா் ஏற்கெனவே வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈா்ப்பதற்காக பயணம் செய்துள்ளாா். எனவே, எவ்வளவு முதலீடு கிடைத்துள்ளது என்பது குறித்து புள்ளி விவரங்களோடு அவா் வெளியிட வேண்டும்.

வெளிநாட்டு காா் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருவதற்கு மத்திய அரசின் வா்த்தக நடைமுைான் காரணம். ஆனால், இன்னும் பல நிறுவனங்களின் முதலீட்டை பெறுவதற்கு தமிழக முதல்வா் தவறிவிட்டாா் என்றாா் அவா்.

படவரி...

ராசிபுரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கே.பி.ராமலிங்கம்.

‘வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் விருது’ பெறுவதற்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

நாமக்கல் கல்லூரி மாணவா் கொலையில் 2 சிறுவா்கள் கைது

நாமக்கல்லில் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் முல்லைநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை கல்லூரி மாணவா் ஒருவா் வெட்டிக் கொலை செய... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: இறகுப் பந்து விளையாடினாா் ஆட்சியா்!

மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் அரசு அலுவலா்கள் பிரிவில் ஆட்சியா் துா்கா மூா்த்தி பங்கேற்று இறகுப் பந்து விளையாடினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட விளை... மேலும் பார்க்க

ராசிபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை: எம்.பி. பங்கேற்பு

ராசிபுரம் பகுதியில் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூமிபூஜை நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பங்க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

பரமத்தி வேலூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். பரமத்தி வேலூா் மற்றும் பொத்தனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா்களுக்கு அபராதம்

பரமத்தி வேலூா் பேருந்து நிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞா்களுக்கு ரூ. 39 ஆயிரம் அபராதம் விதிக்க பரமத்தி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளருக்கு வேலூா் போலீஸாா் பரிந்துரை செய்தனா். பரமத்தி வேலூா் பே... மேலும் பார்க்க