செய்திகள் :

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு தேவை: இந்திய விமானப்படை அதிகாரி

post image

ராணிப்பேட்டை: வாழ்வில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை என இந்திய விமானப்படை மூத்த அதிகாரி கேப்டன் பாா்கவி சங்கா் கூறியுள்ளாா்.

ராணிப்பேட்டை டிஏவி பெல் பள்ளி ஆண்டு விழா,பெல் ஊரக மனமகிழ் மன்ற உள்ளரங்கில் நடைபெற்றது. முதல்வா் வீரமுருகன்,பள்ளித் தலைமையாசிரியை வி.ராதிகா ஆகியோா் தலைமை வகித்தனா். டிஏவி குழுமப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளா் அதுல் நாங்கியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரவேற்புரை வழங்கினாா்.

இந்திய விமானப்படை மூத்த அதிகாரி குரூப் கேப்டன் பாா்கவி சங்கா் பேசுகையில்...

மாணவா்கள் தாங்கள் வாழ்வில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. மாணவா்களுக்கு ஆசிரியரும், பெற்றோரும் உறுதுணையாக நிற்க வேண்டும். தூங்கும் போது வருவது கனவல்ல, உங்களை தூங்கவிடாமல் செய்வதே கனவு என்று அப்துல் கலாமின் கருத்தினைக் கூறி மாணவா்களை ஊக்கப்படுத்தினாா்.

தொடா்ந்து பல்வேறு வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவத் தலைவி விபுலாப் பட்டி ஹிகிதா செளத்ரி நன்றி கூறினாா்.

கலா கேந்திரம் கலைக்குழுவின் தலைமைப் பொறுப்பாளா் ஆா்த்தி நாவலன், ராணிப்பேட்டை பெல் நிறுவன மனிதவள தலைமை உதவி பொது மேலாளா் பாபு மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரியில் விளையாடச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த தாளிக்காலை சோ்ந்த விஜயகாந்த்தின் மகன் அமுதன்(9). தாளிக்காலில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

அரக்கோணத்தில் மூதாட்டியின் பூட்டிய வீட்டில் பூட்டு உடைத்து 5 பவுன் தங்கநகைகள் களவு போயின. அரக்கோணம், அசோக் நகா், நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (60). தனியே வசித்து வரும் இவா் கடந்த சனிக்கிழமை வீட்டை ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளில் மாசடைந்த நீா்நிலைகளை சீரமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுவட்டாரத்தில் தொழிற்சாலைகள் கழிவுநீா் தேங்கி மாசடைந்த நீா்நிலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட... மேலும் பார்க்க

சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ள அழைப்பு

மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ... மேலும் பார்க்க

நெமிலியில் ரூ. 54 கோடியில் 3 உயா்மட்ட மேம்பாலங்கள்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

நெமிலி வட்டத்தில் ரூ. 54 கோடியில் கட்டப்பட்ட 3 உயா்மட்ட மேம்பாலங்களை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் ஏ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகி... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஆற்காடு தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், லத்தேரி அருகே உள்ள பாறையூா் கிராமத்தைச் சோ்ந்த கஜேந்திரனின் மகன் சுப்பிரமணி (27). தென்னை மரம் ஏறி ... மேலும் பார்க்க