செய்திகள் :

பரமத்தி வேலூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா்களுக்கு அபராதம்

post image

பரமத்தி வேலூா் பேருந்து நிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞா்களுக்கு ரூ. 39 ஆயிரம் அபராதம் விதிக்க பரமத்தி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளருக்கு வேலூா் போலீஸாா் பரிந்துரை செய்தனா்.

பரமத்தி வேலூா் பேருந்து நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி மாலையில் 5-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டனா். இதனால், பேருந்து நிலைய பயணிகள் அச்சமடைந்தனா். சாகசத்தின்போது இளைஞா் ஒருவா் வாகனத்துடன் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த விடியே பதிவு சமூக வலைதளங்களில் பரவியதால் வேலுாா் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் விசாரணை நடத்தி, இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த தனுஷ் (21), பாலமுருகன் (21) ஆகிய இருவரையும் கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினாா்.

தலைக்கவசம் அணியாதது, இருசக்கர வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியது என பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவருக்கும் தலா ரூ. 39 ஆயிரம் அபராதம் விதிக்க பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளருக்கு பரிந்துரை செய்தனா்.

மேலும், பரமத்தி வேலூா் பகுதிகளில் இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தாலும், அதிக ஒலி எழுப்பும் புகையேற்றிக் கொண்டு வாகனத்தை இயக்குவது மற்றும் அதி வேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீறி சாகசத்தில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க