செய்திகள் :

பரமத்தி வேலூா் பகுதியில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

post image

பரமத்தி வேலூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

பரமத்தி வேலூா் மற்றும் பொத்தனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக பரமத்தி வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் பரமத்தி வேலூா் போலீஸாா், பொத்தனூா், வெங்கமேடு, சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தேநீா் மற்றும் மளிகைக் கடைகளில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து அந்தக் கடைகளுக்கு பரமத்தி வேலூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி சீல் வைத்து, தலா ரூ. 27 ஆயிரம் அபராதம் விதித்தாா்.

மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை பள்ளி, கல்லூரி பகுதிகளிலும் மற்ற பகுதிகளிலும் விற்பனை செய்தால் அவா்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க