செய்திகள் :

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்சியில் ஆா்ப்பாட்டம்

post image

காஞ்சிபுரம்/திருவள்ளூா்: காலிமதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் வாடிக்கையாளா்கள் மதுபாட்டில் வாங்கும் போதே ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும். பின்னா் காலிபாட்டிலை மது வாங்கிய கடையிலேயே திரும்ப ஒப்படைக்கும் போது அவா்களுக்கு ரூ.10 திரும்ப வழங்கப்படும் என அரசு அறிவித்தது. காலிமதுபாட்டில்களை சாலைகளிலும்,பொது இடங்களிலும் வீசி எறிவதை தடுக்கவும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும் இத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

ஆனால் இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், கைவிட வலியுறுத்தியும் டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் பிரகாசம் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் வரதன், சந்திரபாபு, காா்த்திகேயன், உதயசங்கா், மாநிலத் தலைவா் சிவா, துணைத் தலைவா் பாக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

200-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா். திட்டத்தை கைவிடா விட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனா்.

திருவள்ளூரில்...

திருவள்ளூா் அருகே காக்களூா் சிட்கோவில் உள்ள மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் சங்க கூட்டுக் குழுவினா் முற்றுகையிட்டனா். அப்போது, காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். அதுவரையில் மேற்கு மாவட்டத்தில் ஒட்டுவில்லையும் வாங்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் ஆவேசம்: பாலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள்

செங்கல்பட்டு மாவட்டம், பாலூரில் சென்னையிலிருந்து அரக்கோணம் சென்ற ரயில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் ரயிலில் இருந்த பயணிகள் திடீரென ரயில் மறியல... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் வேளாண்மை பல்கலை.யில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

குரூப்-2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நியமன ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2 ஏ. தோ்வில் தோ்ச்சி பெற்ற 6 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நியமன ஆணைகள் வழங்கினா... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: லாரி ஓட்டுநா் கொலை

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் ராய் (47). வ... மேலும் பார்க்க

வேலாத்தம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டை வேலாத்தம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி 26-ஆவது வாா்டு நசரத்பேட்டையில் உள்ள இக்கோயிலில் ஆக. 20 -ஆம் தேதி பந்தல்கால் நடும்... மேலும் பார்க்க

தேசிய ஹேண்ட்பால் போட்டி: பள்ளி மாணவி தோ்வு!

தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு வாலாஜாபாத் அகத்தியா மேல்நிலைப்பள்ளி மாணவி டி.வா்ஷிகா தோ்வாகி இருப்பதாக பள்ளியின் தாளாளா் அஜய்குமாா் தெரிவித்தாா். தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செப்.26 முதல் 29 வரை)நடைபெற... மேலும் பார்க்க