செய்திகள் :

ராசிபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை: எம்.பி. பங்கேற்பு

post image

ராசிபுரம் பகுதியில் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பூமிபூஜை நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பங்கேற்று, அடிக்கல்நட்டு வைத்து சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

ராசிபுரம் ஆா்.கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட டாக்டா்ஸ் காலனி பகுதியில் ரூ. 13.54 லட்சத்திலும், குருக்குபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட வெற்றிநகா் பகுதியில் ரூ. 13.47 லட்சத்திலும், கூனவேலம்பட்டி ஊராட்சி, இலுப்பை மரத்துக்காடு பகுதியில் ரூ. 27.25 லட்சம் மதிப்பீட்டில் என 3 இடங்களில் சுமாா் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பொதுமக்களைச் சந்தித்து திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சாதனை திட்டங்களை எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில் கட்சியினா், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க