செய்திகள் :

தில்லி திரும்பினார் பிரதமர் மோடி!

post image

சீனா, ஜப்பான் பயணங்களை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 1) மாலை தில்லி திரும்பினார்.

இந்தியாவில் இருந்து ஆக. 29ஆம் தேதி ஜப்பான் புறப்பட்ட பிரதமர் மோடி, 4 நாள்கள் பயணங்களை முடித்துக்கொண்டு செப். 1 ஆம் தேதி மாலை தில்லி திரும்பினார்.

இந்தப் பயணத்தில் சீனாவின் தியான்ஜின் நகரில் ஆக. 31 முதல் செப். 1 வரை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

சீன பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய பிறகு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''சீனாவில் ஆக்கப்பூர்வமான பயணம் நிறைவு பெற்றது. இங்கு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினேன். உலகளாவிய முக்கிய பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன். இந்த உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் சீன அரசுக்கும் மற்றும் மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இப்பயணத்தில் சீனா, ரஷியா அதிபர்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், தெற்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் யுரேசியா நாடுகளைச் சேர்ந்த தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். மாலத்தீவுகள், நேபாளம், லாவோஸ், வியட்நாம், ஆர்மீனியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி அவர்களிடம் எடுத்துரைத்தார்.

இதையும் படிக்க | டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

Prime Minister Narendra Modi returns after four-day visit to Japan and China, calls SCO summit productive

ராஜிநாமா செய்த 6 வாரங்களுக்குப் பின் அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அரசு மாளிகையை காலி செய்தார். அவர் இன்று(செப். 1) புது தில்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையிலிருந்து தமது உடமைகளை எடுத்துச் சென்றார். இதன... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்தாக முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி. ச... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான பெரியளவிலான ஆதாரங்களை பொதுவெளியில் கொண்டு சேர்ப்போம் என்றும், அதன் எதிரொலியாக, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தமது முகத்தைக்கூட காட்டத் தயங்கும் அளவுக... மேலும் பார்க்க

டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பிரதமரின் பேச்சுவார்த்தை சீனாவுக்கு கட்டுப்பட்டு நடப்பதைப்போன்று கோழைத்தனமாக இருந்ததாகவும், டி... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பல் தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரை சோ்த்து ... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண் போலீஸ்! திடீரென வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அப்புறமென்ன..?

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் அருகே காவல் துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வரும் காவலர் ஒருவர், தனது மனைவி வேறொரு ஆணுடன் வீட்டில் தங்கியிருப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அவர்கள் இருவரையும் அடித்து தாக... மேலும் பார்க்க