செய்திகள் :

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண் போலீஸ்! திடீரென வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அப்புறமென்ன..?

post image

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் அருகே காவல் துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வரும் காவலர் ஒருவர், தனது மனைவி வேறொரு ஆணுடன் வீட்டில் தங்கியிருப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அவர்கள் இருவரையும் அடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் விநோதம் என்னவென்றால், அந்த காவலரின் மனைவியும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பதவியில் இருப்பவர்; அதுபோல, அவருடன் இருந்த ஆண் நபரும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கணவனும் மனைவியும் வெவ்வேறு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்ததால் அவர்கள் இருவரின் பணி நேரமும் மாறுதலுக்குட்பட்டதாக அமைந்திருந்தது.

இந்த நிலையில், சம்பவத்தன்று காலை 8 மணியளவில் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்ற கணவன், வீட்டை திறந்து பார்த்தபோது அங்கே அவரது மனைவி தனது நண்பர் அதாவது இன்னொரு காவலருடன் தனிமையில் இருந்துள்ளார்.

‘தனது கணவர் பணி நேரம் முடித்து வீட்டுக்கு வர தாமதமாகும்’ என்று கருதிய மனைவிக்கு கணவர் சீக்கிரமே வீட்டுக்கு திரும்பியதால் சிக்கல் ஏற்பட்டு பிரச்சினை பூதககரமாக வெடித்துள்ளது.

இதையடுத்து, அவரது மனைவி தனது ஆண் நண்பருடன் இருந்த அறையின் கதவைப் பூட்டி உள்ளேயே இருந்துகொண்டு வெளியே வர மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

இப்பிரச்சினையால் ஏற்பட்ட அலறல் சத்தத்தில் அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், இது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டுக்குள் சென்று அறையின் கதவைத் திறந்து மூவரையும் சமாதானப்படுத்திய போலீஸார், அதன்பின் கணவன் அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கதவைத் திறந்ததும் அவர்கள் இருவரையும் கணவன் அடித்து தாக்கிய விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்சினையை முழுக்க முழுக்க மேற்கண்ட மூவரும் பேசி தீர்த்துக் கொள்ளட்டும், யாரும் அவசரப்பட்டு தலையிட வேண்டாமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தனது வீட்டுக்குள், இன்னொரு போலீஸ் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த தனது போலீஸ் மனைவியை அவரது போலீஸ் கணவன் பூட்டி வைத்து தாக்கும் விடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Constable's wife caught with lover in Kushinagar, lover is also police, wife is police, husband is also police

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்தாக முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி. ச... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான பெரியளவிலான ஆதாரங்களை பொதுவெளியில் கொண்டு சேர்ப்போம் என்றும், அதன் எதிரொலியாக, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தமது முகத்தைக்கூட காட்டத் தயங்கும் அளவுக... மேலும் பார்க்க

டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பிரதமரின் பேச்சுவார்த்தை சீனாவுக்கு கட்டுப்பட்டு நடப்பதைப்போன்று கோழைத்தனமாக இருந்ததாகவும், டி... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பல் தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரை சோ்த்து ... மேலும் பார்க்க

ஷார்ஜாவில் கணவரின் சித்திரவதை தாங்காமல் கேரள இளம்பெண் மரணம்? விடியோ வெளியாகி பரபரப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜாவில் உயிரிழந்த கேரள இளம்பெண் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாமலே உயிரிழந்தார் என்பதற்கு வலுசேர்க்கும் விதத்தில் தற்போது விடியோ ஆதாரம் வெளியாகி ப... மேலும் பார்க்க

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி: ரூ.1.86 லட்சம் கோடி வசூல்!

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.86 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017... மேலும் பார்க்க