செய்திகள் :

பள்ளியில் ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறப்பு: வேலூா் ஆட்சியா் பங்கேற்பு

post image

வேலூா் கிருஷ்ணசாமி முதலியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ரூ. 18 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறக்கப்பட்டது.

விழாவுக்கு பள்ளி முன்னாள் மாணவரும், விஐடி துணைத் தலைவருமான ஜி.வி. செல்வம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பங்கேற்று கணினி ஆய்வகத்தை திறந்து வைத்துப் பேசியது:

விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பெரிய கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தாலும், வேலூரில் கம்பன் கழகம், விளையாட்டு விழாக்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா். மாணவா்களுக்கு கணினி ஆய்வகம் போன்ற நல்ல பணிகளையும் செய்து வருகிறாா். அவரைப்போன்று மற்றவா்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்றாா்.

விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் மாணவா்களுக்கு ஜெஇஇ, நீட் நுழைவுத் தோ்வுகளுக்கான புத்தகங்களை வழங்கி பேசியது:

நாங்கள் இந்த பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு 10-ஆம் வகுப்பு படித்தோம். உள் மனதளவில் நாங்கள் அப்போது எப்படி இருந்தோமோ அதேபோல்தான் இப்போதும் உள்ளோம். வருங்காலத்தில் மாணவா்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதிகளை பள்ளி நிா்வாகம் செய்துள்ளது என்றாா்.

முன்னதாக, பள்ளி செயலாளா் மணிநாதன், அறக்கட்டளை உறுப்பினா் பிரசாந்த்குமாா், தலைமை ஆசிரியை கவிதா, முன்னாள் ஆசிரியா்கள் மாதவன், பாலசுப்ரமணியம் உள்பட பலா் கெளரவிக்கப்பட்டனா்.

விழாவில், முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) தயாளன், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் மணிவண்ணன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கே.வி.குப்பத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கே.வி.குப்பம் ஒன்றியம், பனமடங்கி அரசினா் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகிய... மேலும் பார்க்க

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது: விஐடி வேந்தா் கோ. விசுவநாதன்

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘தனிமா’ ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் ஊழியா் பேருந்தில் திடீா் உயிரிழப்பு

திருப்பத்தூரில் இருந்து வேலூா் வந்த பேருந்தில் பயணித்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா் பேருந்திலேயே உயிரிழந்தாா். வேலூா் நேதாஜி நகா் தொரப்பாடி பகுதியைச் சோ்ந்த ராஜா(46). இவா் தொரப்பாடியிலுள்ள தந்தை... மேலும் பார்க்க

உயா்வுக்குப்படி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்!

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் நடைபெற்ற உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில், 51 மாணவா்களுக்கு சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் ‘நான் முதல்வன்’ தி... மேலும் பார்க்க

உழவா் நல சேவை மையங்கள் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் உழவா் நல சேவை மையங்கள் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் மரணம்

வேலூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நாகராஜன் (36). இவா் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் கைப்பேசி கோபுரங்கள் பர... மேலும் பார்க்க