செய்திகள் :

Rain Alert: "செப்டம்பரில் இங்கெல்லாம் அதிக மழை பெய்யும்" - வானிலை மையத்தின் எச்சரிக்கை என்ன?

post image

தெற்கில் மழை, மேற்கில் வெள்ளம் என்று ஏற்கெனவே இந்தியாவில் மழை வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது.

இந்த செப்டம்பர் மாதம் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

"2025-ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், வழக்கத்தை விட, அதிகமாக மழை இருக்கும்.

அதாவது சராசரி மழை அளவான 167.9 மில்லி மீட்டரில் 109 சதவிகிதத்தை விட மழை அதிகமாக இருக்கும்.

பெரும்பாலான இந்தியப் பகுதிகளில் சராசரியிலிருந்து சராசரிக்கு அதிகமாக மழை பெய்யும்.

மழை
மழை

எந்தெந்த பகுதிகள் விதிவிலக்கு?

இருந்தும், சில பகுதிகளில் சராசரிக்குக் குறைவாகவே மழை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை...

இந்தியாவின் வடகிழக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு பகுதிகள் சராசரியிலிருந்து சராசரிக்கு அதிகமான மழை பெய்வதிலிருந்து விலக்காகிறது.

பகல் நேரங்கள் எப்படி இருக்கும்?

பகல் நேரங்களில் மத்தியில் இருக்கும் மேற்கு, வட மேற்கு, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் சராசரியிலிருந்து சராசரிக்கும் குறைவாக வெப்பநிலை இருக்கலாம்.

மத்தியில் இருக்கும் கிழக்குப் பகுதி, கிழக்கு மற்றும் வட கிழக்கு இந்தியா, சில வட மேற்கு பகுதிகள், மேற்கு கடற்கரைப் பகுதிகளில் சராசரியை விட அதிகமாக வெப்பநிலை இருக்கும்.

இரவு நேரங்கள் எப்படி இருக்கும்?

பெரும்பாலான பகுதிகளில் சராசரி மற்றும் சராசரிக்கு மேலாக வெப்பநிலை இருக்கும்.

வடமேற்கு மற்றும் தீவிர தென்னிந்தியாவில் சராசரிக்குக் கீழாக வெப்பநிலை இருக்கும்.

மழை
மழை

விளைவுகள் என்ன?

அதிக மழை விவசாயத்திற்கும், நீர்நிலைகளுக்கும் மிகவும் உதவும்.

ஆனாலும், வெள்ளம், நிலச்சரிவு, போக்குவரத்து நெரிசல், நோய்த் தொற்றுகள் ஏற்படலாம்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, தென்னிந்தியாவிற்குப் பெரும் பாதிப்பு கிடையாது என்று தெரிய வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Rain Alert: 'சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்யும்'- அப்டேட் தந்த வானிலை ஆய்வு மையம்!

கடந்த இரண்டு நாள்களாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக, வால்பாறை, மாஞ்சோலை (திருநெல்வேலி), கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பத்தூர், தேனி, நீலகி... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (43). இவருக்குத் திருமணம் முடிந்து பவித்ரா (40) என்ற மனைவியும், சௌஜைன்யா (7) மற்றும் சௌமையா (4) என இரு மகள்கள் இருக்கின்றனர். ராஜேஷ் குமார் சத்தீஸ்கர் மாநிலத்த... மேலும் பார்க்க

TN Rains: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை மையம் அறிக்கை

நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் மழை பெய்தது. ஆனால், காலை 10 மணிக்கு முன்பே, வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்த... மேலும் பார்க்க

சென்னை: ``50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பதிவு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று அதிகாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருக்கிறது. கிண்டி, அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் இடிய... மேலும் பார்க்க

மும்பை கனமழை: முடங்கிய புறநகர் ரயில் சேவை; அமிதாப்பச்சன் பங்களாவில் புகுந்த மழை வெள்ளம்

மும்பையில் கடந்த 4 நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் மையப் பகுதியில் ஓடும் மித்தி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோரம் ஏராளமான குடிசைகள் இருக்கின்றன. மித்தி ஆற்றில் ஏற்கனவே த... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப் போட்ட கனமழை; சாலைகளைச் சூழ்ந்த வெள்ளம்... இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்றுமுன் தினத்தில் இருந்து தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இக்கனமழை இன்று காலையில் மேலும் தீவிரம் அடைந்தது. இதனால் நகரில் பல சாலைகள் வெள்ளத்தி... மேலும் பார்க்க